tag:blogger.com,1999:blog-15203200454509950142024-03-19T03:46:54.278-07:00மல்லிகை மகள்மகளிர் விரும்பும் குடும்ப மாத இதழ்MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-7012067839631995892013-12-06T00:45:00.001-08:002013-12-06T00:45:17.303-08:00MALLIGAI MAGAL - DECEMBER 2013 ISSUE<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY8AXCOpZBrZCEX8XJaQRL6JEYzTcJpGc1KGcfhwUwkbn-vfWwswS4q1xiEBQWAk3oDulDUALQVhoE_PoU_PBgsL_5DLJjqXSHCWsH5Y2P9NWUBfalt58r2fZE_kfpMuS_2ZNYAvdhmdw/s1600/MMDec13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY8AXCOpZBrZCEX8XJaQRL6JEYzTcJpGc1KGcfhwUwkbn-vfWwswS4q1xiEBQWAk3oDulDUALQVhoE_PoU_PBgsL_5DLJjqXSHCWsH5Y2P9NWUBfalt58r2fZE_kfpMuS_2ZNYAvdhmdw/s320/MMDec13.jpg" width="228" /></a></div>
<br /></div>
MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-66953761102156945272013-03-09T02:58:00.002-08:002013-03-09T02:58:59.933-08:00Malligai Magal - March 2013 issue wrap<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEick7LtSebrOfUniWTkRsnArI2NSaguUp4a8Em5qsE1EEFcBy6OPTKl6GpFHYjbKia8udmafXXK_kA37bZ465HkiWM2pjRzEGj2QBuaDoRwjxOux9NDXYtxXeGHfRrGA3sl1k1QJ04XOLE/s1600/wrap.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" jsa="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEick7LtSebrOfUniWTkRsnArI2NSaguUp4a8Em5qsE1EEFcBy6OPTKl6GpFHYjbKia8udmafXXK_kA37bZ465HkiWM2pjRzEGj2QBuaDoRwjxOux9NDXYtxXeGHfRrGA3sl1k1QJ04XOLE/s320/wrap.jpg" width="230" /></a></div>
</div>
MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-10515675483337442192012-02-02T03:14:00.001-08:002012-02-02T03:15:33.098-08:00மல்லிகை மகள்<div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOv42CcHzMtvkq95OFcXN0FeqLdau4wnfOvmc5J8MkcQ2iJvwPvBbb3r1sUVDuTmuFd2etBla96LxN8zpTKOSOvRadFiiA__H9_GMjXgcEvWcDuG-n9u5He8tuU_2s_prVYmvb_bld96g/s1600/Wrapper_Feb12.jpg"><img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 230px; FLOAT: right; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5704495290649019042" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOv42CcHzMtvkq95OFcXN0FeqLdau4wnfOvmc5J8MkcQ2iJvwPvBbb3r1sUVDuTmuFd2etBla96LxN8zpTKOSOvRadFiiA__H9_GMjXgcEvWcDuG-n9u5He8tuU_2s_prVYmvb_bld96g/s320/Wrapper_Feb12.jpg" /></a></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-76251368449519938452011-05-02T07:03:00.000-07:002011-05-02T07:05:23.858-07:00மல்லிகை மகள் - மே மாத இதழ்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzdUR3jdTmF768DArQxb1YNZ2CwtzzzmbaEaeT0tXiief5POPPbXcJyKEbgun0cZRDDccbH8pMLrDZGkyq1hsFJ5ygZFO-z5CFFconx_kVMmiw4pcAThRxmm9OA9nLTVBm4qeaKXh3684/s1600/Malligai_May+Wrap.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5602119393156109522" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzdUR3jdTmF768DArQxb1YNZ2CwtzzzmbaEaeT0tXiief5POPPbXcJyKEbgun0cZRDDccbH8pMLrDZGkyq1hsFJ5ygZFO-z5CFFconx_kVMmiw4pcAThRxmm9OA9nLTVBm4qeaKXh3684/s320/Malligai_May+Wrap.jpg" border="0" /></a><br /><br /><div></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-75206824298672708592011-04-20T07:44:00.000-07:002011-04-20T07:46:03.815-07:00மல்லிகை மகள் - ஏப்ரல் ౨౦౧౧ இதழ் அட்டை<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtdF4AISs0-N_Xp2cdSAxKY8-YQhMiK3xsSf2XavWyLWm4YOgw2iVv73CrvTPwnVWOvw5Nm5-MmIZWpRWgJYllBd3e5g8rBXrwAuO9YBO5PA5kUhQW1yG4AWBaRoSdsB0Mr3cBdBhfQa8/s1600/MM_April+Wrap.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5597676984957146818" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtdF4AISs0-N_Xp2cdSAxKY8-YQhMiK3xsSf2XavWyLWm4YOgw2iVv73CrvTPwnVWOvw5Nm5-MmIZWpRWgJYllBd3e5g8rBXrwAuO9YBO5PA5kUhQW1yG4AWBaRoSdsB0Mr3cBdBhfQa8/s320/MM_April+Wrap.jpg" border="0" /></a><br /><br /><div></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-79406593483809810442011-02-26T06:28:00.000-08:002011-02-26T06:30:29.265-08:00மல்லிகை மகள் - மார்ச் ౨౦౧౧ இதழ்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpDOMn1cqDRHKOn1Hj92G-EEw46qRq07fn1cjCuWvMkm0GOthP1TuBikocB_hspRvVLgkKVu7A2UbowFI5BGL2y6EgRZ6Mk8RfgNMTIufHwaSaL2S2SBnPJT4OgL5tGZSBqn-OD0epsQI/s1600/MM_March+Wrap.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5578005544328012098" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 231px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpDOMn1cqDRHKOn1Hj92G-EEw46qRq07fn1cjCuWvMkm0GOthP1TuBikocB_hspRvVLgkKVu7A2UbowFI5BGL2y6EgRZ6Mk8RfgNMTIufHwaSaL2S2SBnPJT4OgL5tGZSBqn-OD0epsQI/s320/MM_March+Wrap.jpg" border="0" /></a><br /><div></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-88284772236220958332010-12-08T01:10:00.001-08:002010-12-08T01:11:59.138-08:00Malligai Magal - December 2010 issue<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhssAdYileN7A6WP0oMyK5pKa7swficRLt65j9RNA9Se8oMe_F-ztzL_jAlAh8FSnp41w5WS2QtXIjNDxco9inHzJ8e7D19OQD76ai-YntB4Tz_2_QgEJwZtxbJCH0CHOF6wqFKvnfu4pc/s1600/MM_Wrapper.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhssAdYileN7A6WP0oMyK5pKa7swficRLt65j9RNA9Se8oMe_F-ztzL_jAlAh8FSnp41w5WS2QtXIjNDxco9inHzJ8e7D19OQD76ai-YntB4Tz_2_QgEJwZtxbJCH0CHOF6wqFKvnfu4pc/s320/MM_Wrapper.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5548236537700709314" /></a>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-84120611250073898502010-10-30T05:43:00.000-07:002010-11-12T01:02:58.489-08:00மல்லிகை மகள் & சுப வரம் - நவம்பர் இதழ்கள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvwStE5XSFuzmnG1WwAw6S3hJnKfmQCkS6eZ4jm5IAwFVCOgZDvjJ5nZnqg6QK6Q2-_Jp6G9Bajx9rAnNW4X3nABYAeAtkbn1YVMVIQgn23qEaWZ9_JU_Gqj36HtTjJb47-0EAyCC9twg/s1600/SV_diwali+Issue.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5534954208514467810" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvwStE5XSFuzmnG1WwAw6S3hJnKfmQCkS6eZ4jm5IAwFVCOgZDvjJ5nZnqg6QK6Q2-_Jp6G9Bajx9rAnNW4X3nABYAeAtkbn1YVMVIQgn23qEaWZ9_JU_Gqj36HtTjJb47-0EAyCC9twg/s320/SV_diwali+Issue.jpg" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicDK0ADimVXiG_TzDalLoZ8oc7TDoLY8NpDqx01Xoxe4KUQUxpOxhGQhur9CwIbcY5t25fmbz-Sa44d7v-o85j9wRkeRyDiSxnA_hc4pwbsg3NA9EJ3T-7n8nOg5fmKVJ9MTtL5EQJkbc/s1600/MM_diwali+Issue.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5534954200712429010" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicDK0ADimVXiG_TzDalLoZ8oc7TDoLY8NpDqx01Xoxe4KUQUxpOxhGQhur9CwIbcY5t25fmbz-Sa44d7v-o85j9wRkeRyDiSxnA_hc4pwbsg3NA9EJ3T-7n8nOg5fmKVJ9MTtL5EQJkbc/s320/MM_diwali+Issue.jpg" border="0" /></a><br /><br /><div></div></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-37606244164667778692010-09-29T02:01:00.001-07:002010-09-29T02:03:30.557-07:00வரம் - அக்டோபர் இதழ்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIXc6iVEDTed1NvhE2YWuTmGP1bGbz0_iZSwpjn9OzlCtuYrELo8IHJU1iqQ52L6mkTetgMg2DwGd_OiD8yInJzj6nitd7cNzMJzFRyYvnvVyZf5aoPJXnQSq445NBzStGRo1bNbAxfcc/s1600/SV_Wrap_oct.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5522258225586052306" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIXc6iVEDTed1NvhE2YWuTmGP1bGbz0_iZSwpjn9OzlCtuYrELo8IHJU1iqQ52L6mkTetgMg2DwGd_OiD8yInJzj6nitd7cNzMJzFRyYvnvVyZf5aoPJXnQSq445NBzStGRo1bNbAxfcc/s320/SV_Wrap_oct.jpg" border="0" /></a><br /><div></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-64550216115943095472010-09-29T01:59:00.000-07:002010-09-29T02:01:20.207-07:00மல்லிகை மகள் - அக்டோபர் இதழ்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXqVQh01xgD4ZUkra_peW40Mv9j-v9Dm4DCUXD9n9uk_9pYfWn3W-Bqj5_bSpw_MVSY2_dvg7ODNIPHa-R-hFdndMelIMe9kcO2Tr-UtjUzv9YbIKcUzwq8ebzKtKJns3EcJf-SBApvS4/s1600/MM_Wrap_oct.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5522257726347801762" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXqVQh01xgD4ZUkra_peW40Mv9j-v9Dm4DCUXD9n9uk_9pYfWn3W-Bqj5_bSpw_MVSY2_dvg7ODNIPHa-R-hFdndMelIMe9kcO2Tr-UtjUzv9YbIKcUzwq8ebzKtKJns3EcJf-SBApvS4/s320/MM_Wrap_oct.jpg" border="0" /></a><br /><div></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-7139517012670378172010-07-05T04:30:00.000-07:002010-07-05T04:45:02.896-07:00சசிகலா - தெரியாத நிஜம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiewaAGtTMcrhafwuKN_w10Q5fPYdT4mwHCGe0lwwNpc1wnCNHOuN-MGjp8VNtZ2yqSwrL7dhcGkSuiHQJ7qpI-Qhd1YB0VP5W5dwUCvGG1Z3fhxSbuWeZQSX6jGlyIvJcwj1sbLm4uKg/s1600/sasikala.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5490386759024940930" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 247px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiewaAGtTMcrhafwuKN_w10Q5fPYdT4mwHCGe0lwwNpc1wnCNHOuN-MGjp8VNtZ2yqSwrL7dhcGkSuiHQJ7qpI-Qhd1YB0VP5W5dwUCvGG1Z3fhxSbuWeZQSX6jGlyIvJcwj1sbLm4uKg/s320/sasikala.gif" border="0" /></a><br /><div>ஜெயலலிதாவின் உயிர்த்தோழி.. </div><br /><div>- சசிகலாவுக்கு காலத்துக்கும் மாறாத கௌரவ அடையாளம் இது. மற்றபடி, சசிகலா எப்படி? அவருக்குப் பிடித்த & பிடிக்காத விஷயங்கள் என்ன? அவற்றையெல்லாம் எந்தக் கணத்திலும் அவர் சொன்னதில்லை. யாரும் (தைரியத்தோடு) கேட்டதும் இல்லை. சசிகலா என்கிற பெயரைத் தவிர பிரத்யேக விஷயங்கள் அத்தனையுமே பரம ரகசியம்தான்.</div><br /><div>சசிகலாவின் பிறந்த ஊரான திருத்துறைப் பூண்டி வடக்குச் செட்டித் தெருவை தேடிப்போய் பேச்சு கொடுத்தால்.. நம் ‘மல்லிகை மகளை’ அட்டை டூ அட்டை புரட்டிவிட்டுத் தான் வாய் திறக்கிறார்கள். அவ்வளவு ஜாக்கிரதை!</div><br /><div>‘‘இந்த மண்ணுல பொறந்த மகராசி, மாரியம்மா புண்ணியத்துல நினைச்சுப் பார்க்க முடியாத உசரத்துக்கு போயிட்டாங்க. ஆனா, ‘பவர்’ல இருந்தாலும் இல்லாட்டியும் பொறந்த மண்ணையும் தன்னோட இந்த சொந்தங்களையும் மறக்கவே மாட்டாங்க. பங்குனி மாச உற்சவம் வந்துட்டாலே மகா மாரியம்மனைக் கும்பிட வருஷம் தவறாமல் வந்திடுவாங்க.. மதுரை வீரன்தான் அவங்க குலசாமி. ஆனாலும், இங்கே இருக்கிற மகா மாரியம்மன்தான் அவங்களுக்கு இஷ்ட தெய்வம். ஆரம்ப காலத்தில் பெரிசா வசதி இல்லாத குடும்பம். அதனாலேயே நல்ல படிப்பு படிக்கக்கூட நாலு பேரோட உதவி ஒத்தாசையை எதிர்பார்க்கவேண்டிய நிலை. அதெல்லாம் தடாலடியா மாறினதே இந்த மகா மாரியம்மனோட புண்ணியத்தால தான்னு இன்னிக்கும் நம்புறவங்க அவங்க. படியளந்த தெய்வத்துக்கு பெரிசா கோயில் கட்டி ஜெயலலிதாம்மாவையே அழைச்சுக் கிட்டு வந்து திருவிழா கொண்டாடினாங்க.. அப்போ ஜெயலலிதாம்மா இந்தக் கோயிலுக்கு வெள்ளிக்கவசம் உபயம் கொடுத்தாங்க. </div><br /><div>இப்பல்லாம் எப்பவாவதுதான் சசியம்மாவால ஊருக்கு வரமுடியுது. அந்த சமயத்துல யாரு என்ன உதவி கேட்டாலும், ‘செய்யறேன்’ ‘செய்யலை’னு எந்த பதிலும் சொல்ல மாட்டாங்க. ஆனா, அவங்க கிளம்பிப் போன பின்னாலேயே ‘அம்மா அனுப்பினாங்க’னு யாராச்சும் ஒருத்தர் வந்து, உதவி கேட்டவங்களுக்கு உரியதை செஞ்சுட்டு போவார். அந்தளவுக்கு எதையுமே வெளிக்காட்டிக்காத ஆளு அவங்க..’’ - அந்த செட்டித் தெருவே சிலிர்க்கிறது.</div><br /><div>‘‘என் பேரைப் போட்டுடாதீங்க.. சசியம்மாவுக்கு என்னைய நல்லா தெரியும்..’’ என்றபடியே சசிகலாவின் பள்ளிக்கால நிகழ்வு ஒன்றை சொன்னார் ஒரு பெண்மணி.</div><br /><div>‘‘திருத்துறைப்பூண்டியில் இப்பவும் இருக்கற போர்டு ஹைஸ்கூல்லதான் சசியம்மா படிச்சாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க.. சின்ன வயசுல அவங்க ரொம்ப பயந்த சுபாவம். யாரும் சாதாரணமா திட்டினாக்கூட ‘ஓ..’ன்னு அழுதுடுவாங்க. ஒரு தடவை ஸ்கூல்ல நடந்த ஓட்டப்பந்தயத்துல கலந்துகிட்டு ரெண்டாவது பரிசு வாங்கினாங்க. இந்த விஷயம் அவங்க வீட்டுக்கு எப்படியோ தெரிஞ்சுப் போச்சு. அப்புறமென்ன.. ‘வயசுக்கு வந்த பொண்ணு.. கால் தூக்கி ஓடுறதா’னு கேட்டு, ஒரு நாள் முழுக்க வீட்ல முட்டிப் போட வெச்சுட்டாங்க..’’ சிரிப்பு தாளாமல் சிரித்தார் அந்தப் பெண்மணி.</div><br /><div>‘‘ஓட்டப்பந்தயத்தில மட்டுமில்லை.. மாணவர் மன்றம் நடத்துற இலக்கிய விழாக்களிலுமே சசிகலாவின் பங்களிப்பு தவறாமல் இருக்கும்’’ என்றபடி தொடர்கிறார் சசிகலாவின் பள்ளி சீனியரான அப்பாத்துரை.</div><br /><div>‘‘இங்கிலீஷ் மருந்துக்கார வீடுனு சொன்னாத்தான் சசிகலா வீடு தெரியும். ஆரம்பத்தில் சந்திரசேகரன் பிள்ளைதான் திருத்துறைப்பூண்டி ஏரியாவுலயே இங்கிலீஷ் மருந்துக்கடை நடத்தியவர். அவரோட பையன்தான் விவேகானந்தன். இவருக்கு நாலு பையன், ரென்டு பொண்ணு. அதில மூத்த பொண்ணுதான் சசி. பந்த பாசத்துக்கு பஞ்சமில்லாத குடும்பம். ஆரம்பத்தில் செட்டித் தெருவில இருந்த புகையிலைக் கடைக்கார செட்டியார் வீட்டுலதான் சசிகலா ரொம்பப் பிரியமா இருப்பாங்க. சின்ன வயசு பிரியம் மாறாம இன்னிக்கும் அந்த செட்டியார் குடும்பத்தில் என்ன ஒரு விஷயம்னாலும் முதல் ஆளா ஆஜராகிடுவாங்க. கோயில் விசேஷத்துக்கு சசி வந்திருப்ப, ‘நம்மள எல்லாம் ஞாபகம் இருக்கோ இல்லியோ’னு நினைச்சு, ஒரு ஓரமா நின்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனா, முகத்தைப் பார்த்த உடனேயே ‘அண்ணே..’னு அவ்வளவு ஆசையா கூப்பிட்டாங்க. அப்படி பழசை மறக்காத மனசு அவங்களோடது!</div><br /><div>எட்டாவது வரைக்கும் இங்கே படிச்ச சசி, அதுக்கப்புறம் மன்னார்குடிக்கு போயிட்டாங்க. அண்ணன்கள் தலையெடுத்த பிறகு அவங்க குடும்பம் ஓஹோனு முன்னேறிடுச்சு. அதுக்கப்புறம்தான் சசிக்கு ஜாம்ஜாம்னு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. இன்னிக்கும் அவங்க குடும்பத்துல என்ன விசேஷம் நடந்தாலும் யாருக்கு அழைப்பு போகுதோ இல்லையோ எங்களை மாதிரியான பொறந்த ஊர் ஆளுங்களுக்கு அவசியம் அழைப்பு வந்துடும்...’’ பெருமையோடு சொல்கிறார் அப்பாதுரை. </div><br /><div>சந்தானகிருஷ்ணன், சசிகலாவுக்கு உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தவர். அவர், ‘‘படிக்கிற காலத்திலேயே சசி ரொம்ப அமைதியான பொண்ணு. சுந்தரவதனம், வினோதகன், ஜெயராமன், திவாகரன்னு நாலு அண்ணன் தம்பிகளும் சசியை கண்ணுக்குள்ள வச்சுதான் பார்த்துக்கிட்டாங்கனு சொல்லணும். கண்டிப்பும் அந்த மாதிரி இருக்கும். பாசமும் அந்த மாதிரி இருக்கும். ஊர்ப்பக்கம் வர்றப்ப சித்தப்பா, பெரியப்பா, மாமானு எல்லா சமுதாய ஆட்களையும் உறவுமுறை சொல்லித்தான் சசி அழைப்பாங்க.</div><br /><div>எனக்கு விவரம் தெரிஞ்சு அவங்க ஆறாவதோ ஏழாவதோ படிச்சப்ப, ஏதோவொரு வேஷம் போட்டு பள்ளிக்கூட நாடகத்துல நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்ல ஆர்வம் அதிகம். இருந்தாலும், வீட்டுக்குப் பயந்து படிப்பில் மட்டுமே தீவிரம் காட்டினாங்க. </div><br /><div>இப்போ அடிக்கடி ஊர்ப்பக்கம் எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு பிஸியாகிட்டாங்க. ஆனாலும், யார் மூலமாவது ஊர்ல நடக்கிற நல்லது கெட்டதுகளைப் பற்றி தெளிவா தெரிஞ்சுக்குவாங்க. சம்பந்தப்பட்ட விசேஷ வீடுகளுக்கு சர்ப்ரைசா வந்து கதவைத் தட்டி, அவங்களை திக்குமுக்காட வெச்சிடுவாங்க. </div><br /><div>பள்ளியில படிக்கறப்ப, அவங்ககிட்ட ரொம்பப் பிடிச்ச விஷயம்னா, மத்தவங்களை ஆத்மார்த்தமா மதிக்கிற குணம்தான். இன்னிக்கும் மத்தவங்களை மதிக்கிற குணத்தை அவங்க கைவிட்டுடலை. அதேமாதிரி, இந்த ஊர் மேலயும் உறவுங்க மேலயும் அவங்க வெச்சிருக்கிற வாஞ்சையும் குறையலை..’’ என்கிறார் வியப்பு மேலிட!</div><br /><div>- நமது நிருபர்</div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-51093038748308532042010-07-02T02:00:00.000-07:002010-07-02T02:03:59.596-07:00மல்லிகை மகள் - ౩-ம் ஆண்டு சிறப்பிதழ்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLhYwCvjKzHd8KHJpJ9d6jG96GdGU8XnKjGjqcFj4dsxvLtOWy2wiDfJ5qaPzNcx-w9vMR5xm8yFO7wp8vuutKzx4ldQ8Z70-ePVI09AoIV3ndRDnRRnK-732xRvTJ_wH0JfYchsCEC2c/s1600/MM_Wrap+July.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5489231980584122274" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLhYwCvjKzHd8KHJpJ9d6jG96GdGU8XnKjGjqcFj4dsxvLtOWy2wiDfJ5qaPzNcx-w9vMR5xm8yFO7wp8vuutKzx4ldQ8Z70-ePVI09AoIV3ndRDnRRnK-732xRvTJ_wH0JfYchsCEC2c/s320/MM_Wrap+July.jpg" border="0" /></a><br /><div>உங்கள் மல்லிகை மகளுக்கு மூன்று வயது நிறைகிறது. தாய்மை உணர்வு பொங்கும் வாசகர்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகளாலும் அவள் உள்ளம் பூரித்து நிற்கிறாள்.</div><br /><div>இந்த சிறப்பிதழில் பல்வேறு புதிய அம்சங்கள்.. கூடுதல் பக்கங்களில் மலர்ந்திருக்கின்றன.</div><br /><div>உங்களின் ஆதரவுக்கு உளப்பூர்வமான நன்றி! </div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-71006429976291833932010-07-02T01:57:00.000-07:002010-07-02T01:59:28.150-07:00சுப வரம் - ஜூலை இதழ்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZLldXNR-5MNVnkgoMuqgxHxoNnDgk0HTATVH5i2D9Evbz7-xgTRYq-ff8SHUBV0mVvMPi2G2A7c0F87rnr4j2Trv5-5kTu7pszC6IiVfHfk7DH89pj30p15Bz3AkVEXUv2s-teMEB_rI/s1600/SV_Wrap+July.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5489230742220841746" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZLldXNR-5MNVnkgoMuqgxHxoNnDgk0HTATVH5i2D9Evbz7-xgTRYq-ff8SHUBV0mVvMPi2G2A7c0F87rnr4j2Trv5-5kTu7pszC6IiVfHfk7DH89pj30p15Bz3AkVEXUv2s-teMEB_rI/s320/SV_Wrap+July.jpg" border="0" /></a><br /><div></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-54394266323986506322010-03-31T01:28:00.001-07:002010-03-31T01:31:08.312-07:00மல்லிகை மகள் & சுப வரம் - ஏப்ரல் இதழ்கள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRP8IzNMjtUfzIomXvi2bMrQYmNjNjLKYALyQPQ18DIJs_ibrTqx9ZYVjdsyZshSslvHJE0ScTR8Fn_SlpxsMAhwOFdaQ_oBBkgdKDdg-wGEpaq9n_nMWr6nL8hEeJS5VChmzZeYblH9g/s1600/SV_WRAPPER.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5454712619837818418" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRP8IzNMjtUfzIomXvi2bMrQYmNjNjLKYALyQPQ18DIJs_ibrTqx9ZYVjdsyZshSslvHJE0ScTR8Fn_SlpxsMAhwOFdaQ_oBBkgdKDdg-wGEpaq9n_nMWr6nL8hEeJS5VChmzZeYblH9g/s320/SV_WRAPPER.jpg" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7P_N2YLLovttPXTuT0MEiQgHD6rQ4-9ksXcHEPryY7FuXROhMGcEheRL330gt40gM7r61Ckw91dE6C2708FGDzunP6E8xbT4RXpyYcUWwHyJPqV6xA7DQ-swWYXe2j4b-mBOosLUdCKM/s1600/MM_WRAPPER.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5454712612852178930" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7P_N2YLLovttPXTuT0MEiQgHD6rQ4-9ksXcHEPryY7FuXROhMGcEheRL330gt40gM7r61Ckw91dE6C2708FGDzunP6E8xbT4RXpyYcUWwHyJPqV6xA7DQ-swWYXe2j4b-mBOosLUdCKM/s320/MM_WRAPPER.jpg" border="0" /></a><br /><br /><div>மல்லிகை மகள் மற்றும் சுப வரம் ஏப்ரல் இதழ்கள்.. இப்போது விற்பனையில்!</div></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-42978606103754063922010-02-12T01:06:00.000-08:002010-02-12T01:27:54.383-08:00ஒரு திடுக் காதல் கதை<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnvxuJfl87WizZycLBQ2mRFvYkDz4XD5KwWyrTh404CZ7jhBVXU1v8MTnLWP5i5NFq7kxJ4yOtZJPZaf9QnflFAKaWx34XNutCGqDPS0gqjKClsk72YTmuIf7nzW68KzGm4BZAVu9Qp_g/s1600-h/_DSC0019.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5437286233498112946" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnvxuJfl87WizZycLBQ2mRFvYkDz4XD5KwWyrTh404CZ7jhBVXU1v8MTnLWP5i5NFq7kxJ4yOtZJPZaf9QnflFAKaWx34XNutCGqDPS0gqjKClsk72YTmuIf7nzW68KzGm4BZAVu9Qp_g/s320/_DSC0019.JPG" border="0" /></a><br /><div>துறுதுறுவென டீன் ஏஜ் பெண் போல இருக்கிறார் சாந்த்ரா. திருமணமாகி இரண்டரை வருடங்கள் ஓடியும், இன்னும் அந்தக் குழந்தைத்தனம் மாறவில்லை. வார்த்தைக்கு வார்த்தை ‘அச்சு’ புராணம்தான். அப்படித்தான் தன் காதல் கணவர் பிரஜினை அழைக்கிறார்.<br /></div><br /><div>பிரஜினும் அப்படித்தான். எது பேசினாலும் ‘மாலுக்குட்டி’ (சாந்த்ராவுக்கு அவர் வைத்திருக்கும் செல்லப் பெயர்)&யில் ஆரம்பித்து, மாலுக்குட்டியிலேயே முடிகிறது.<br /></div><br /><div>சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ளடங்கிய ஒரு அபார்ட்மென்ட்டில், அழகிய சிறிய ஃப்ளாட்டில் தனிக்குடித்தனம். தம்பதிக்கு கம்பெனி கொடுக்க ஜென்னி, சுப்பிரமணி என்று இரண்டு நாய்க்குட்டிகள்.<br /></div><br /><div>‘‘எங்களால பிப்ரவரி மாதத்தை மறக்கவே முடியாது.. ரெண்டு வருஷத் துக்கு முன்னால, எங்க கல்யாணத்துக்கு அங்கீகாரம் கிடைச்சு, ரிசப்ஷன் நடந்தது இதே காதல் மாசத்தில்தான்..’’ என்று பேச ஆரம்பிக்கிறார் சாந்த்ரா. ‘அங்கீகாரம் கிடைச்சு’ என்று சுலபமாகச் சொல்லி விட்டாலும், அதற்குப் பின்னிருக்கும் வலிகளும் வேதனைகளும் எக்கச்சக்கம்.<br /></div><br /><div>‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவனந்தபுரம்.. அப்பா, அம்மாவுக்கு ஒரே பொண்ணு.. ஆனா, அவங்க துபாய்ல இருந்ததால, படிக்கிறதுக்காக நான் எங்க அத்தைகிட்ட வளர்ந்தேன். லீவுல மட்டும் துபாய் போவேன்.சின்ன வயசிலேயே நிறைய மலையாளப் படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கேன்.. ப்ளஸ் டூ படிக்கிறப்பதான் ‘கிரண் மியூஸிக்’ சேனல்ல காம்பியரிங் பண்ற வாய்ப்பு கிடைச்சது. அப்போதான் ‘சன் மியூஸிக்’ல பிரஜினோட ப்ரோகிராம் பார்த்தேன்.. அவர் பேசுற விதம், ஸ்டைல் எல்லாம் பார்த்து அவரோட ஃபேன் ஆயிட்டேன்.<br /></div><br /><div>அந்தச் சமயத்தில டி.வி. காம்பியரர்ஸ் சிலரை வச்சு ஒரு பத்திரிகையில பேட்டிக்கு ஏற்பாடு பண்ணினாங்க. அதுக்காகத்தான் நான் முதன்முதல்ல பிரஜின்கூட பேசினேன். அப்புறம் அடிக்கடி பேசி நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம். ஆனா, நாங்க எந்த பேட்டிக்காக அறிமுகம் ஆனோமோ, அது அப்புறம் வரவே இல்லைங்கறது வேற விஷயம்...!’’ என்று சொல்லி, காசை சுண்டிவிட்டதுபோல கலகலவென சிரிக்கிறார் சாந்த்ரா.<br /></div><br /><div>மனைவியின் சிரிப்பழகை ரசித்துக் கொண்டிருந்த பிரஜின், ‘‘பழக ஆரம்பிச்ச ஒரே மாசத்திலேயே ரெண்டு பேருக்கும் ‘இது வெறும் நட்பு மட்டுமில்ல’னு புரிஞ்சு போச்சு! டக்னு ஒருநாள் சாந்த்ரா தன்னோட லவ்வை ப்ரபோஸ் பண்ணினாங்க. நான் சொன்னேன்.. ‘இது லைஃப் சம்பந்தப் பட்ட விஷயம்.. எனக்கு ஒரு ஆறு மாசம் டைம் கொடு.. இது சரிப்பட்டு வருமானு நல்லா யோசிச்சுட்டு சொல்றேன்’னு சொன்னேன்..’’ என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இடைமறித்த சாந்த்ரா, ‘‘அப்படித்தான் சொன்னார்.. ஆனா, அன்னிக்கு சாயந்திரமே போன் பண்ணி, தன்னோட காதலை சொல்லிட்டாரு.. ஆறு மாசம் டைம் கேட்டவருக்கு ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியல..’’ என்கிறார் சிரிப்புக்கிடையில்.<br /></div><br /><div>‘‘சாந்த்ரா கிறிஸ்டியன்.. நான் இந்து! ரெண்டு குடும்பமும் ரொம்ப ஆர்தடாக்ஸ்.. அதனால ரெண்டு பேரும் மூச்சே விடாம ரகசியமா காதலிச்சோம்.. 2005&ல ஆரம்பிச்சு, 2007&ல எங்க கல்யாணம் நடக்கற வரைக்கும் ரெண்டரை வருஷத்துக்கு நாங்க பார்த்துக்கவே இல்ல..’’ என்று பிரஜின் சொல்ல..<br />‘‘ஆமா.. ரெண்டு பேரும் டி.வி.ல பார்த்துக்கறதோட சரி! மத்தபடி போன்தான்! ரெண்டு பேருமே மீடியாவில் பாப்புலர்ங்கறதால, அவர் கேரளாவுக்கு வந்து பார்த்தா யாருக்காவது தெரிஞ்சிடும்னு அவரும் வரமாட்டார்.. எனக்கு தனியா சென்னையெல்லாம் வந்து பழக்கமே இல்லை.. அதனால நானும் வரமுடியாது.. ப்ச்.. ஆனாலும், நாங்க ரொம்பப் பாவம்!’’ என்று ‘உச்சு’ கொட்டுகிறார் சாந்த்ரா.<br /></div><br /><div>‘‘அம்மா, அப்பாகிட்ட எப்படி மேட்டரை ஓப்பன் பண்றதுன்னு பயந்துகிட்டே இருந்தேன்.. மெதுவா, ரெண்டு வீட்டிலேயும் பேசி அவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம்கிறதுதான் எங்க பிளான்.. ஆனா, நடந்ததோ வேற!’’ என்று வருத்தமாக சாந்த்ரா பெருமூச்சுவிட.. தொடர்கிறார் பிரஜின்.<br /></div><br /><div>'‘சாந்த்ரா வீட்டுல என்னைப் பத்தி சொன்னதும் ரொம்பக் கோபமாயிட்டாங்க அவங்க பேரன்ட்ஸ்! வேற இடத்தில் அவசரமா கல்யாணம் பண்றதுக்கு முயற்சி வேகமா நடந்தது. அதேசமயம், எங்க வீட்ல யும் விஷயம் தெரிஞ்சு வெடிச்சது பூகம்பம்.. ‘கிறிஸ்டியன் பொண்ணா.. முடியவே முடியாது’னு உறுதியா சொல்ல.. என்ன பண்றதுனு ரொம்ப குழம்பிட்டோம். அப்புறம் திடமா முடிவெடுத்து, ‘நம்ம காதல் உறுதியானதுன்னா அது நம்மைச் சேர்த்து வைக்கட்டும்.. நீ கிளம்பி சென்னை வந்துடு’னு சொல்லிட்டேன். இவங் களும் வந்துட்டாங்க.ஈஸியா சொல்லிட் டேனே தவிர, இங்க வந்தப்புறம் சாந்த்ரா அனுபவிச்ச தனிமையும் கொடுமையும் இருக்கே.. அது எங்க காதலுக்கான அக்னிப் பிரவேசம்தான்!’’ என்றார் பிரஜின்.<br /></div><br /><div>‘‘நான் சென்னை வந்துட்டேனே தவிர, இங்கே எனக்கு யாரையுமே தெரியாது. பிரஜின்தான் எனக்கு ரொம்ப தைரியம் சொல்லி, ஒரு வுமன்ஸ் ஹாஸ்டல்ல தங்க வச்சார்.. சென்னையில் கல்யாணம் பண்ணினா மீடியா மூலமா எல்லாருக்கும் தெரிஞ்சிடும்னு, திருச்சியில இருக்கிற பிரஜினோட ஃப்ரெண்ட் ஃபேமிலிகிட்டே போய்த் தஞ்சம் புகுந்தோம். நாங்க வேற வேற மதம்கிறதால உடனடியா ரிஜிஸ்டர்டு மேரேஜ் பண்ண முடியாதுனு சொல்லி, திருவாரூர் சிவன் கோயில்ல வச்சு, இந்து முறைப்படி கல்யாணம் நடந்தது.கல்யாணம் முடிஞ்சபிறகு, திரும்பவும் சென்னையில ஹாஸ்டல் வாசம்.. முடிஞ்சப்போ எப்பவாவது வந்து பார்ப்பார்.. எங்க ஐடியா என்னன்னா, வீட்ல இருக்கற வங்ககிட்ட கல்யாணம் ஆன விஷயத்தைச் சொல்லி எப்படியாவது சமாதானப்படுத்திடலாம்கிறதுதான்! புது சூழ்நிலை, புது மனுஷங்க, பழக்கமில்லாத சாப்பாடு, கிளைமேட்னு எல்லாம் சேர்ந்துகிட்டு என் மனசும் உடம்பும் ரொம்பவே சோர்ந்து போய், டைபாய்டு காய்ச்சல் வந்துடுச்சு! பார்த்துக்கிறதுக்கு யாரும் இல்ல.. பிரஜின்தான் என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி, பார்த்துகிட்டார். உடம்பு கொஞ்சம் தேறி ஹாஸ்டலுக்கே வந்தேன்.. ஹாஸ்டல்ல எல்லாரும் உண்மை தெரியாம, ‘உங்க ஊருக்குப் போயிடு.. உடம்பு தேறினதும் வா’ன்னாங்க! நான் யார் வீட்டுக்குப் போறது?<br /></div><br /><div>அந்தச் சமயம் பார்த்து பிரஜின் ‘காதலிக்க நேரமில்லை’ சீரியலுக்காக, சிங்கப்பூர் போக வேண்டியதாயிடுச்சு.. ஹாஸ்டல்ல ஒவ்வொருத்தருக்கா விஷயம் தெரிஞ்சு என்னை கேக்க ஆரம்பிச்சிட்டாங்க! இது போதாதுனு, எங்க வீட்ல வேற, என்னைக் காணோம்னதும், தேடிக்கிட்டு நேரா பிரஜின் வீட்டுக்கு வந்துட்டாங்க.. டென்ஷனான பிரஜினோட பேரன்ட்ஸ், என்னையும் அவர் சிங்கப்பூர் கூட்டிக்கிட்டுப் போய்ட்டார்னு நினைச்சு அவருக்கு போன் போட்டு கோபமா கேட்க.. வேற வழியில்லாம பிரஜின் எல்லா விஷயத்தையும் சொல்லிட்டார்.. ஆத்திரத்துல, எங்க வீட்லருந்து வந்தவங்க, அப்படியே திரும்பி ஊருக்குப் போய்ட்டாங்க!<br /></div><br /><div>என் மாமியார் உடனே கிளம்பி வந்துட்டாங்க என்னைப் பார்க்கறதுக்கு! என்னைப் பார்த்ததும் அவங்க கொஞ்சம் சமாதானம் ஆனாங்க..’’ - கோர்வையாக சொல்லிக் கொண்டே வந்த சாந்த்ரா நிறுத்தவும், விறுவிறுப்பான காதல் திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது ‘இடைவேளை’ விட்ட உணர்வு நமக்கு.<br /></div><br /><div>தொடர்ந்த பிரஜின், ‘‘அப்புறம், எல்லாப் பிரச்னை களையும் ஒரு மாதிரியா சமாளிச்சு, 2008, பிப்ரவரில ஊரறிய எங்க ரிசப்ஷன் நடந்தது. அதுக்கப்புறம் எங்க வீட்டு மருமகளா சாந்த்ரா வீட்டுக்குள்ள அடியெடுத்து வச்ச நாள், மறக்க முடியாதது! நடிக்கிறது, காம்பியரிங் எல்லாத்தையும் விட்டுட்டு, முழுநேர இல்லத்தரசியா, மாமியார் சொல் கேட்கிற மருமகளா மாறினாங்க! நாலஞ்சு மாசத்தில சாந்த்ராவுக்கு சீரியல்களில் நடிக்கிற வாய்ப்பு வரவே, நாங்க தனிக்குடித்தனம் வர வேண்டியதாயிடுச்சு! இப்ப நான் சினிமாவுல என்ட்ரி ஆயிட்டேன். இவங்களும் சீரியல், கேம் ஷோ, டான்ஸ் ஷோனு பண்ணிட்டிருக்காங்க.. எங்களுக்கு துணைக்கு இந்த குட்டீஸ்! லைஃப் இஸ் கோயிங் ஸ்மூத்லி!’’ என்று முடிக்கிறார்.<br /></div><br /><div>‘‘இப்பவாவது உங்க அம்மா, அப்பா சமாதானம் ஆனாங்களா, இல்லையா?’’ என்றோம் சாந்த்ராவிடம். ‘‘அம்மா போன வருஷம்தான் சமாதானம் ஆகி, கொஞ்ச நாள் முன்னால இங்கே வந்து என் கூட பத்து நாள் தங்கிட்டுப் போனாங்க.. அப்பாவுக்கு இன்னும் கோபமும் வருத்தமும் இருக்கு.. நாளாக ஆக சரியாயிடும்னு நம்பறேன். ஏன்னா, பிரஜின் அவ்வளவு நல்ல சாய்ஸ்! எங்கம்மா அப்பா பார்த்துக் கல்யாணம் பண்ணி இருந்தாகூட நான் இவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பேனானு சொல்ல முடியல.. ரெண்டரை வருஷம் பார்த்துக்காமலேயே பழகினாலும் கூட எங்க ரெண்டு பேரோட, ப்ளஸ், மைனஸ் எங்க ரெண்டு பேருக்குமே நல்லாத் தெரியும்! அதனால, ஈகோ பிரச்னை, பொசஸிவ்நெஸ்னு தம்பதிகளுக்குள்ள பொதுவா வர்ற பிரச்னைகள்கூட எங்களுக்குள்ள வர்றதில்ல.. அப்படிப் பிரச்னை வந்தாலும் எங்களுக்குள்ள அஞ்சு நிமிஷத்துக்கு மேல நிக்கிறதில்ல.. என்ன சண்டை வந்தாலும், அதை ஆரம்பிச்சவங்க அஞ்சு நிமிஷத்துக்குள்ள அதை முடிச்சிடணும்னு எங்களுக்குள்ள அக்ரிமென்ட்டே இருக்கு! அதனால, அபூர்வமா எங்களுக்குள்ள வர்ற சண்டைகளுக்கும் ஆயுசு அஞ்சு நிமிஷம்தான்!’’ - மென்மையான புன்னகைப் பூ சாந்த்ராவிடம்.<br /></div><br /><div>‘‘முன்னெல்லாம் எனக்கு நிறைய கோபம் வரும்.. இப்ப, சாந்த்ராவால அது படிப்படியாக் குறைஞ்சு, பக்குவப்பட்டு, நல்லா மோல்டு ஆயிட்டேன்! ஆனா, சாந்த்ராவுக்கு உடம்புதான் இன்னும் ‘செட்டில்’ ஆகல.. கொஞ்சம் ஸ்ட்ரெயின் பண்ணாலும் உடம்புக்கு முடியாம போயிடும். சமீபத்துலகூட ஜாண்டிஸ் வந்து ரொம்ப கஷ்டப் பட்டாங்க..’’ என்று கரிசனமாக பிரஜின் குறிப்பிட..‘‘இவருக்கு டெய்லி சாப்பாட்டுல நான்&வெஜ் இருக்கணும். ஆனா, எனக்கு ஜாண்டிஸ் வந்திருந்தப்ப ரெண்டு மாசமும் எனக்காக, நான் சாப்பிட்ட பத்தியச் சாப்பாட்டையே சாப்பிட்டுக்கிட்டு இருந்த அந்த அன்பே.. என்னை சீக்கிரம் குணப்படுத்திடுச்சு!‘‘ - சாந்த்ராவின் குரலில் நெகிழ்ச்சி!<br /></div><br /><div>‘‘எதிர்காலக் கனவு...?’’ என்று இருவரையும் பார்த்துப் பொதுவாக வினவ..<br />‘‘நல்ல படங்கள்ல நடிச்சு, சம்பாதிச்சு சாந்த்ராவுக்கு அழகான வீடு ஒண்ணு கட்டித் தரணும்.. குழந்தை பெத்துக்கிட்டு லைஃப்ல செட்டில் ஆகணும்.. அதான் என் கனவு!’’ என்கிறார் பிரஜின்.<br /></div><br /><div>குறும்பாகப் பார்த்த சாந்த்ரா, ‘‘எனக்கு ஒரே ஒரு ‘லவ் சப்ஜெக்ட்’ படம் நடிக்கணும்.. அதுவும் இவர் கூட நடிக்கணும். அவ்வளவுதான்!’’ என்கிறார்.<br />‘‘இடையில் நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டதா செய்தி வந்ததே!’’ என்று நாம் தயங்கியபடி கேட்க..பளிச் பதில் வருகிறது சாந்த்ராவிடமிருந்து.<br />‘‘அது நான் ஹாஸ்டல்லயும் இவர் வீட்லயும் இருந்தப்போ கேள்விப்பட்ட செய்தியா இருக்கும்.. ஆனா, அந்த செய்தி பத்திரிகைகள்ல வந்தப்போ நாங்க இந்த வீட்ல சந்தோஷமா குடித்தனம் பண்ணிட்டிருந்தோம்.. அதையெல்லாம் கண்டுக்கிற மூடுல கூட இல்ல..!’’ என்று சொல்லும் சாந்த்ரா, காதல் காலத்தில் பிரஜின் அனுப்பிய முதல் பரிசான நீல நிறப் புடவை, டெடி பியர், திருமணம் ஆனதும் முதன்முதலாக பீச்சுக்கு அழைத்துச் சென்றபோது வாங்கித் தந்த மல்லிகைப் பூ.. என பல காதல் பரிசுகளை பத்திரமாக பாதுகாக்கிறார்.<br /></div><br /><div>‘‘உங்களோட நீண்ட காதல் கதையில மறக்கமுடியாத தருணம்?’’<br />‘‘எனக்காக ஹாஸ்டல்ல தங்கி சாந்த்ரா பட்ட கஷ்டம்தான் என்னால மறக்கவே முடியாத விஷயம்.. வீட்டுல என்னால இயல்பாவே இருக்க முடியாது.. நான் வீட்டுல சாப்பிடறப்போ, ‘அய்யோ.. மாலு இப்போ ஹாஸ்டல் சாப்பாடை சாப்பிட்டுட்டிருக்குமே’ங்கிற நினைப்பே ரொம்ப டிஸ்டர்ப் பண்ணும். ‘நல்லா வளர்ந்த பொண்ணு.. நம்மால இப்படிக் கஷ்டப்படுதே’னு நினைச்சு மனசு பதறும்.. சாப்பிடவே தோணாது.. வெளில கூட்டிட்டுப் போய் வாங்கித் தரவும் முடியாது. அது நரக வேதனை!’’ என்று குரல் கம்மப் பேசிய பிரஜின், சில விநாடிகளில் பிரகாசமாகி, ‘‘அப்பா, அம்மாவை விட்டுட்டு வந்த பொண்ணு, நாம நல்லா வச்சுக்கணுமேன்னு ஒவ்வொரு நிமிஷமும் உள்ளுக்குள்ள ஓடிட்டே இருக்கும்! என் மனைவியை சந்தோஷமா வச்சுக்கணும்.. எல்லாரும் பொறாமைப்படற மாதிரி நாங்க வாழ்ந்து காண்பிக்கணும்’’ என்கிறார் அழுத்தமாக.<br /></div><br /><div>வாழவைத்த காதலுக்கு ஜே!<br /></div><br /><div>- மித்ரா, படங்கள்: சந்துரு</div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-55316158995051518992010-02-01T00:26:00.000-08:002010-02-01T00:35:50.342-08:00மல்லிகை மகள்.. பிப்ரவரி இதழ்..<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFlhadbFDEIVnLZKHzfh5cKk9x6O_PJNXc54FelgGQ3WS5euaYa6mWyPm_PePUMAh6CYA42Q22PQRxZHTGErhLmX0cG-O15F-RtjPs3Grn_Vjpak6L_g2TbrJ2RUEm9Y-Nll2O8JS3c9Q/s1600-h/feb+wrap+MM1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5433190868382652594" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFlhadbFDEIVnLZKHzfh5cKk9x6O_PJNXc54FelgGQ3WS5euaYa6mWyPm_PePUMAh6CYA42Q22PQRxZHTGErhLmX0cG-O15F-RtjPs3Grn_Vjpak6L_g2TbrJ2RUEm9Y-Nll2O8JS3c9Q/s320/feb+wrap+MM1.jpg" border="0" /></a><br /><div></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-76378821771615201272009-12-15T04:25:00.000-08:002009-12-15T04:26:02.213-08:00<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI4O2ogrM21sU8k0a8KxXkj40u9GfzWiMYGQuinb1kNhIWVdcvBXwrAx6MPyG_EKdm1NjJlJdMKY9XDy-0JrP8v7UHelhWxAFlZ2cEkKs0SyQapUjQNqRuBuunrUYxYRsMAnuV45z677c/s1600-h/wrap.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5415438156990806946" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI4O2ogrM21sU8k0a8KxXkj40u9GfzWiMYGQuinb1kNhIWVdcvBXwrAx6MPyG_EKdm1NjJlJdMKY9XDy-0JrP8v7UHelhWxAFlZ2cEkKs0SyQapUjQNqRuBuunrUYxYRsMAnuV45z677c/s320/wrap.jpg" border="0" /></a><br /><div></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-45719564808073216512009-12-15T03:58:00.000-08:002009-12-15T04:10:05.397-08:00கோவை சரளா.. தெரியாத நிஜம்!<strong><span style="color:#ff0000;">எல்லோருக்கும் தெரிந்த வி.ஐ.பி&க்களின் வெளியில் தெரியாத நிஜ இயல்புகளை விசாரிக்கும் தொடர் பகுதி இது! இந்த இதழில், உங்களை நெகிழ வைப்பது கோவை சரளா!</span></strong><br /><br /><strong>தி</strong>ரையில் எல்லாரையும் சிரிக்க வைக்கிற என் தோழி, நிஜத்தில் ஒரு மெழுகுவர்த்தி மாதிரி! தன் உடன் பிறந்தவங்களுக்காக சின்ன வயசிலருந்து உழைச்சு, அவங்க பசங்களைத் தன் பசங்க மாதிரி வளர்த்து, ஆளாக்கி, படிக்க வச்சு, கல்யாணமும் பண்ணிப் பார்க்கும் பெரிய மனசுக் காரி!’’<br />- ‘கோவை சரளா’ பற்றி இப்படிச் சொல்லி உருகுகிறார், அவரது கால் நூற்றாண்டு கால தோழியான ராணி.<br /><br />கொங்கு தமிழில் ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் கோவை சரளாவின் இன்னொரு பக்கம் நெகிழ்ச்சியானது. இதோ, அவரோடு நெருங்கிப் பழகும் மூவர், சரளா பற்றி வெளியுலகம் அறியாத நிஜங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள்.<br /><br /><strong>லதா மோகன்தாஸ் (சரளாவின் நெருங்கிய தோழி மற்றும் சம்பந்தி), திருநெல்வேலி:</strong><br />‘‘எனக்கு சரளாவை எட்டு வருஷமாதான் தெரியும்.. ஆனா, எண்பது வருஷப் பழக்கம் மாதிரி அப்படி ஒரு அன்பும் அன்னியோன்யமும் வந்துடுச்சு எங்களுக்குள்ள.. கோயம்புத்தூர் கணபதில, சரளாவோட அக்கா வீடும் எங்க அண்ணா வீடும் நெய்பர்ஸ்.. நான் அண்ணா வீட்டுக்குப் போறப்ப, சரளாவும் அவங்க அக்கா வீட்டுக்கு வந்திருந்தாங்கன்னா, பார்த்துப் பேசுவேன். அப்படி ஆரம்பிச்ச பழக்கம்தான், சம்பந்தம் பண்ற அளவுக்கு வளந்துடுச்சு. எங்க பொண்ணை, சரளாவோட அண்ணா பையனுக்கு கல்யாணம் செய்து கொடுத்திருக்கோம்.<br /><br />ரெண்டு மூணு வருஷமா என்னோட தீபாவளியே சென்னையில சரளா வீட்டில்தான்! வருஷாவருஷம் எனக்கு பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்துடுவாங்க.. அதுமட்டுமல்ல, தன் வீட்டு செக்யூரிடிலருந்து, பக்கத்து அபார்ட்மென்ட் வாட்ச்மேன், எதிர்த்தாப்ல இருக்கற மெக்கானிக் ஷெட் பசங்கனு எல்லாருக்கும் துணி எடுத்துத் தருவாங்க.. தீபாவளி அன்னிக்கு அவங்க அத்தனை பேருக்குமே சரளா வீட்டுலதான் லன்ச். அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட 50,000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கி, அந்தத் தெருவுல எல்லாருக்கும் கொடுத்து வெடிக்க வெச்சு, அவங்க சந்தோஷப்படறதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்குவாங்க.. அப்படியொரு மனசு!<br /><br />ஒரு சமயம், நாங்க எல்லாரும் பேசிக்கிட்டிருக்கறப்ப, சரளாவோட ஸ்கூல் மேட் ஒருத்தங்க கணவரை இழந்து குழந்தைங்களோட கஷ்டப்படறதைப் பத்தி பேச்சோட பேச்சா சொல்லிட்டிருந்தாங்க அவங்க அக்கா. உடனே, அந்த ஃப்ரெண்ட் இப்ப எங்க இருக்காங்கன்னு தேடிப் பிடிச்சு, அவங்க குழந்தைங்களோட படிப்புச் செலவுக்கு பண உதவி செய்தாங்க. ஸ்கூல் டேஸ்&க்கு அப்புறம் ரெண்டு பேருக்கும் எந்த ‘டச்’&ம் இல்ல.. ஆனாலும், ஓடிப் போய் உதவின மனிதநேயம்.. அதுதான் சரளா!<br /><br />அதேமாதிரி, காசிக்குப் போகணும்னு ஆசைப்பட்டு, வசதி இல்லாததால போக முடியாம இருந்த வயசான ஒரு தம்பதிக்கு, காசிக்கு போய்ட்டு வர்றதுக்கு அரேன்ஜ் பண்ணினாங்க.. டூர் முடிச்சிட்டு வந்தவங்க, ‘எங்க புள்ளைங்க நிறைவேத்தாத ஆசையை, நீ நிறைவேத்திட்டம்மா.. இந்தப் புண்ணியம் முழுதும் உனக்குத்தான்!’னு சொல்லி, கண்கலங்கினதை மறக்கவே முடியாது!<br /><br />கஷ்டப்படறவங்களுக்கு உதவுறதுல, எம்.ஜி.ஆர் தான் சரளாவோட ரோல்மாடல்.மருத்துவம், கல்வினு பல பேருக்கு உதவி செய்திருக்காங்க.<br /><br />சரளாவுக்கு சமையல்னா ரொம்ப இஷ்டம்.. சென்னையில தன் வீட்ல அவங்க சமைக்கிறதுக்கு ஆள் வச்சுக்கலன்னா பார்த்துக்குங்க. ஹைதராபாத்துக்கு அடிக்கடி ஷூட்டிங் போறதால ஆந்திரா அயிட்டம்லாம் நிறைய கத்துக்கிட்டு வந்து செய்வாங்க.. ஆந்திரா சமையல்லருந்து அந்தக் காலத்துல செய்ற மருந்துக் குழம்பு வரை, நிறைய அயிட்டம் நான் சரளாகிட்ட கத்துக்கிட்டிருக்கேன்.<br /><br />சரளாவுக்கு நாலு அக்கா, ஒரு அண்ணா.. எல்லோரும் ரொம்பப் பாசமா, ஒற்றுமையா இருப்பாங்க.. சரளாவை தவிர மத்த எல்லோருமே கோவையிலதான் இருக்காங்க.. அதனால, நேரம் கிடைக்கறப்ப எல்லாம் சரளா கோவைக்கு வந்துடுவாங்க. அவங்க அக்காக் களும் பசங்களும் ‘சரளா’ன்னா உயிரையே விடுவாங்க.<br /><br />சரளாவோட அக்கா ஒருத்தங்க சின்ன வயசிலேயே இறந்துட் டாங்க.. அவங்க பையனை சரளாவேதான் தன் கூட வச்சு வளர்த்துட்டு வர்றாங்க.. எங்க மாப்பிள்ளையும் (அவங்க அண்ணா பையன் & யு.எஸ்&ல மைக்ரோஸாஃப்ட்ல வேலை பார்க்கிறார்) சரளாகிட்ட வளர்ந்தவர்தான். பசங்க எல்லாம் அண்ணா யுனிவர்ஸிடில படிச்சுப் பெரிய வேலையில இருக்காங்க.. ஒரு பாக்கு கூட போட மாட்டாங்க.. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாம அப்படி ஒரு கண்டிப்பான வளர்ப்பு அவங்களோடது..<br /><br />குடும்பத்தில் இருக்கறவங்களுக்கு டிரஸ், நகைனு வாங்கிக் கொடுத்து போட்டுக்கச் சொல்லி அழகு பார்ப்பாங்களே தவிர, தான் ஆடம்பரமா எதுவுமே போட்டுக்க விரும்ப மாட்டாங்க.. கழுத்தில ருத்ராட்சம் கோர்த்த ஒரு மணிமாலைதான்! கிட்டத்தட்ட ஒரு துறவி போல வாழ்க்கை நடத்தும் சரளாவோட நட்பு, எனக்குக் கடவுள் கொடுத்த பரிசு!’’<br /><br /><strong>மீனா சம்பத்குமார், கோவை (சரளாவின் அக்கா மகள்):<br /></strong>‘‘கோவை சரளாவின் நாலாவது அக்கா பொண்ணு நான்! சரளா சித்தியை நாங்க ‘ஜெம்லி’னுதான் கூப்பிடுவோம். அந்தப் பேர் எப்படி வந்ததுனு எல்லாம் தெரியாது. ஆனா, எங்க வீட்ல பெரியவங்கள்லருந்து சின்னவங்க வரைக்கும் அவங்க, ‘ஜெம்லி’தான்..<br /><br />எங்க ஃபேமிலியோட ‘பைண்டிங் ஃபேக்டர்’ அவங்கதான்.. குடும்பத்தோட அவ்வளவு பாசப்பிணைப்பா இருப்பாங்க.. ஜெம்லி சென்னையில இருந்தாலும், கோவையில இருக்கற எல்லா குடும்பத்திலருந்தும் எல்லா ‘அப்டேட்ஸ்’ம் பக்காவா அவங்களுக்குப் போயிடும்.. ஷூட்டிங், ஃபங்ஷன், அது, இதுன்னு பிஸியா இருந்தாலும், கம்யூனிகேஷனை அவ்வளவு அழகா மெயின்டெயின் பண்ணுவாங்க.<br /><br />ஆண், பெண் வித்தியாசம் இல்லாம எல்லாரும் எல்லா வேலைகளையும் செய்யணும்கிறது ஜெம்லியோட உத்தரவு. அதனால, சமையல்லருந்து டிரைவிங் வரை எல்லாருமே எல்லாம் கத்துக்கிட்டிருக்கோம்.. எங்க வீட்டு வேலைக்கு ஆள் இருந்தாலும், டாய்லட் சுத்தம் செய்றது உள்பட எந்த வேலையாக இருந்தாலும், அவசியம்னா நாங்களும் செய்வோம்.<br /><br />ஜெம்லி படிச்சதெல்லாம் கோவையில தான்.. ஸ்கூல்ல படிக்கறப்பயே, நல்ல பேச்சுத் திறமை இருந்தது ஜெம்லிக்கு! ஒருமுறை, எம்.ஜி.ஆர். கோவை வந்திருக்கறப்போ, ஜெம்லியை அவருக்கு அறிமுகம் செஞ்சு வச்சிருக்காங்க. அவர், ‘உனக்கு நிறைய திறமை இருக்கு.. நீ நல்லாப் படிக்கணும்’னு சொல்லி, ஸ்காலர்ஷிப் கொடுத்திருக்கார். அந்த ஸ்ஸாலர்ஷிப் உதவியில படிச்சதாலதான், அவங்களுக்கு ‘நாமும் பிறருக்கு படிக்கிறதுக்கு உதவி செய்யணும்’கிற எண்ணம் சின்ன வயசிலேயே ஆழமாப் பதிஞ்சிருச்சு!<br /><br />ஜெம்லிக்கு சிம்பிளா டிரெஸ் பண்றது தான் பிடிக்கும். நிறங்கள்ல வெள்ளையும், மாம்பழ மஞ்சளும் ரொம்பப் பிடிக்கும். அவங்களோட இஷ்ட தெய்வம்னா அது குருவாயூரப்பனும், பகவதி அம்மனும். சொந்த ஊர் திருச்சூர்.. வருஷம் ஒரு தடவை எல்லோரும் குலதெய்வம் கோயிலுக்கு கண்டிப்பா போயிடுவோம்.<br /><br />ஜெம்லி, யாரையும் புண்படுத்தற மாதிரி பேசவே மாட்டாங்க.. கோபத்தை கூட அவங்க காண்பிக்கிற விதம் வித்தியாசமா இருக்கும். ‘ஒரு விசேஷம் நடக்குது.. அதுல ஜெம்லிக்கு ஏதோ ஒரு கோபம்’னா, நாங்க எல்லாரும் கிராண்டா ஸாரி கட்டிட்டிருக்கும் போது, அவங்க மட்டும் ரொம்ப சிம்பிளா ஒரு டிரெஸ் போட்டுக்கிட்டு வருவாங்க.. அதுலருந்து அவங்களுக்கு ஏதோ பிடிக்கல, கோபமா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.<br /><br />பொண்ணுங்கன்னா யாரையும் சார்ந்திருக்காம, தன் கால்ல சுதந்திரமா இருக்கணும்கிறது அவங்களோட எண்ணம். நாங்க பசங்கல்லாம், பிறரை எதிர்பார்க்காம எங்க கால்ல நிக்கிறோம்னா, அதுக்குக் காரணம் அவங்கதான்! என்னைப் பொறுத்தவரை, ஜெம்லி.. ‘எ ஸிம்பல் ஆஃப் மோட்டிவேஷன்’!’’<br /><br /><strong>ராணி சண்முகம் (சரளாவின் கால் நூற்றாண்டுத் தோழி), சென்னை:</strong><br />‘‘25 வருஷத்துக்கு முன்னால நாங்க கோடம்பாக்கத்துல இருந்தப்போ, எங்க எதிர்வீட்டுல குடியிருந்துச்சு ஜெம்லி (நாங்களும் அப்படித்தான் கூப்பிடுவோம்). அப்போ ஆரம்பிச்ச பழக்கம்! அப்புறம், சாலிகிராமத்துல சொந்த வீடு கட்டிக்கிட்டுப் போனாலும், நட்பு விட்டுப் போகல..<br /><br />ஜெம்லியோட அம்மாவை நானும் ‘அம்மா’னுதான் கூப்பிடுவேன்.. அவங்களுக்கு அஞ்சு பொண்ணோட சேர்த்து, நானும் ஒரு பொண்ணாகிட்டேன்.. இப்பவும் கூட என்ன பண்டிகை, விசேஷம்னாலும் ஒரு தாய் வீட்டிலருந்து பொண்ணுக்கு சீர் வர்ற மாதிரி, ஜெம்லி வீட்லருந்து எனக்கு எல்லாம் வந்திடும்.<br /><br />எல்லார் வீட்டுலயும் டிரைவர், வேலைக்காரங்க மாறிக்கிட்டே இருப்பாங்க இல்ல? ஆனா, ஜெம்லி வீட்ல மட்டும் அந்தக் காலத்திலருந்து இப்ப வரை, மேக்&அப் மேன்லருந்து டிரைவர் வரை எல்லாருமே பழைய ஆளுங்கதான்.. ஏன்னா, அவங்களுக்கு வீடு கொடுத்து, குழந்தைகளின் படிப்புச் செலவை ஏத்துக்கிட்டு, அவங்க குடும்பப் பிரச்னையை தன் பிரச்னையா நினைச்சு உடனே சரிசெய்ற ஜெம்லி இருக்கறப்போ, அவங்க ஏன் வேற இடத்துக்குப் போகப் போறாங்க!<br /><br />திரையில் எல்லாரையும் சிரிக்க வைக்கிற என் தோழி, நிஜத்தில் ஒரு மெழுகுவர்த்தி மாதிரி! தன் குடும்பத்தினருக்காக சின்ன வயசிலருந்து உழைச்சு, உடன்பிறந்தவங்க பசங்களைத் தன் புள்ளைங்க மாதிரி வளர்த்து, ஆளாக்கி, படிக்க வச்சு, கல்யாணமும் பண்ணிப் பார்க்கும் பெரிய மனசுக்காரி! ‘தாயைக் காத்த தனயன்’னுதான் கேள்விப்பட்டிருக்கோம்.. ஆனா தாயைக் கண் போலக் காத்திட்டிருக்கிற மகள் இவ!<br /><br />ஒருசமயம் எனக்கு அப்பண்டிசைடிஸ் ஆபரேஷன் ஆகி, ஆஸ்பத்திரியில இருந்தேன்.. அந்த சமயம் ஜெமிக்கு நல்ல ஜுரம்.. முதல் நாள் தான் அது ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வந்திருக்குது. ஆனா, நான் அட்மிட் ஆகியிருக்கறதைக் கேள்விப்பட்டு, ஜுரத்தோட வந்து, மூணு மாடி ஏறிவந்து, ‘உனக்கு ஒண்ணும் இல்லடி.. பயப்படாத.. தைரியமா இரு!’னு சொல்லிட்டுப் போச்சு. அந்த அன்பும் கரிசனமும் என்னை உருக்கிடுச்சு!<br /><br />ஒருமுறை ஷீர்டி போய்ட்டு வந்தப்ப, எனக்காக அங்கருந்து ஒரு பாபா சிலை வாங்கிட்டு வந்துச்சு.. ‘எனக்காக நீ பாபாகிட்ட வேண்ட, வேண்ட.. நான் நல்லாயிருப்பேன் ராணி’னு சொல்லுச்சு! இப்பவும் எங்க பூஜையறையில இருக்கும் அந்த பாபாகிட்ட தினமும் நான் அவளுக்காக வேண்டறேன்.. ஜெம்லி இன்னும் நல்லா, சிறப்பா, சந்தோஷமா இருக்கணும்னு!’’<br /><br /><div align="right"><strong>- பிரேமா நாராயணன்</strong></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-13162399024051612372009-07-31T06:21:00.000-07:002009-07-31T06:26:50.902-07:00'மல்லிகை மகள்' உங்கள் வீடு தேடி வர..<strong><span style="font-size:130%;">'மல்லிகை மகள்' இதழ் </span></strong><br /><strong><span style="font-size:130%;">உங்கள் வீடு தேடி வரவேண்டுமா?</span></strong><br /><br /><strong><span style="font-size:130%;">ஒரே ஒரு *போன்கால் போதும்.. </span></strong><br /><strong><span style="font-size:130%;"></span></strong><br /><strong><span style="font-size:130%;">இப்போதே அழையுங்கள்.. </span></strong><br /><span style="font-family:courier new;"><strong><span style="font-size:180%;">95000 50650</span></strong></span><br /><br />* தமிழ்நாட்டு அழைப்புகளுக்கு மட்டும்MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-66239172260696407922009-07-31T06:12:00.000-07:002009-07-31T06:17:35.432-07:00கணவரிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி?<strong>ஆகஸ்ட் 2009 மல்லிகை மகள் இதழிலிருந்து ஒரு கட்டுரை.. </strong><br /><strong><span style="color:#ff0000;">கணவரிடம் நல்ல பெயர் எடுப்பது எப்படி?</span><br />ஒரு</strong> மாலைப் பொழுதில் ஆழ்ந்த கலந்துரையாடலில் இருந்த ‘அண்ணாநகர் (சென்னை) லேடீஸ் கிளப்’ பெண்கள் மத்தியில் இப்படியொரு கேள்வியை கொளுத்திப் போட்டோம். உற்சாக பட்டாசாக சீறி வந்தன உபயோகமான டிப்ஸ்!<br /><br />‘‘கணவருக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட்டாலே அவரோட மனசை ஈஸியா ஜெயிச்சிடலாம். அதேமாதிரி, கரண்ட் பில் கட்டறது, வீட்டை நிர்வாகம் பண்றதுனு நம்மால முடிஞ்சதை செய்யணும். கணவரைவிட அதிகமா நாம படிச்சிருந்தாலும் சரி, அவரைவிட அதிகமாக சம்பாதித்தாலும் சரி, கர்வமில்லாம பணிவா நடந்துக்கிட்டா கணவரோட மானசீக மகாராணியாகிடலாம்!’’ என்று கலந்துரையாடலுக்கு பிள்ளையார் சுழி போட்டார் கிளப்பின் செகரட்டரி தங்கமணி விஸ்வநாதன்.<br /><br />‘‘கரெக்ட் மேடம்.!’’ என்று ஆமோதிப்போடு தொடங்கிய கிளப்பின் துணைத்தலைவர் மீரா சங்கரமூர்த்தி, ‘‘அதேபோல, தனக்குப் பிடித்தவர்கள் நம்ம வீட்டுக்கு வந்தா அவங்களுக்கு மனக்குறை ஏதும் வராதபடி நல்லா உபசரிக்கணும்கிறதும் ஆண்களின் பொதுவான எதிர்பார்ப்பு. இப்படி, அவருக்கு கெட்ட பேர் வராதபடிக்கு நாம நடந்துக்கிட்டாலே நல்ல பேர் வாங்கிடலாம்..’’ என்று கூற, இடைமறித்தார் கீர்த்தி நாராயணன்.<br /><br />‘‘அதோட, ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு டயர்டா வர்ற கணவர்கிட்ட, ‘ஏன் முகம் இப்படி இருக்கு, ஆபீஸ்ல இன்னிக்கு என்ன நடந்தது, அப்படி இப்படி..’னு கேட்டு தொணதொணக்க கூடாது. சூடா காபியோ, டீயோ போட்டுக் கொடுத்து, அவருக்கு தேவையானதை செய்துட்டு நகர்ந்திடணும். ஏதாவது சீரியஸான பிரச்சனைன்னா அவரே சொல்லிடப் போறார். அதேமாதிரி, நமக்கு ஒரு பொருள் வாங்கணும்னு தோணும்போது கணவர் இப்போ இதை வாங்கவேண்டாம்னு சொல்றார்னா சரினு கேட்டுக்கணும். ஏன்னா, வாங்கக்கூடிய சூழ்நிலை இப்போ இல்லைனு அவருக்கு தெரியும்போது, நமக்கும் அது தெரியணும்தானே!’’ என்றார் யதார்த்தமாக.<br /><br />‘‘நாங்க ரெண்டு பேருமே கொஞ்சம் அமைதியான டைப்ங்கறதால, ஒருத்தருக்கொருத்தர் நல்லாவே அட்ஜஸ்ட் பண்ணிப்போம். என்கூட பிறந்தவங்ககிட்ட பழகற மாதிரியே அவரோட சகோதர சகோதரிகள்கிட்ட நான் பழகறது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பொதுவாக அவர் ஏதாவது ஒரு காரியத்தை செய்யாதேன்னு சொன்னா, அதை மீறி இது நாள் வரைக்கும் நான் செய்தது இல்லை. எல்லா விஷயத்திலயும் நாங்க 50&50தான்’’ என்றார் வேணி மகாலிங்கம் மென்மையான புன்னகையுடன்.<br /><br />‘‘கண்டிப்பா, இது எல்லோருமே ஃபாலோ பண்ண வேண்டிய ஒண்ணுதான். அதோட, பெரும்பான்மையான ஆண்களுக்கு.. என் வீட்டுக்காரர் உட்பட, அவங்களோட உடன்பிறந்தவங்ககிட்ட பாசம் காட்ட தெரியுமே தவிர, எந்தெந்த விசேஷத்துக்கு என்னென்ன செய்முறை செய்யணும், என்னென்ன வாங்கிக் கொடுக்கணும்ங்கறது சரியா தெரியாது. பல நேரங்கள்ல எங்க வீட்டு விசேஷங்கள்ல, அவர்கிட்டேயிருந்து பணத்தைக் கூட எதிர்பார்க்காம, நான் சேர்த்து வைச்சிருக்கிற பணத்தை வைத்தே தேவையானதை செய்திடுவேன். அப்புறம் அது அவருக்கு தெரியவரும்போது, ரொம்பவே சந்தோஷப் படுவார். அதேமாதிரி, அவருக்கு பிடிக்காத எதையும் நான் செய்யமாட்டேன். அதுக்காக அவர் சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டி விடுவேன்னு இல்லை. ‘ரெசிஸ்டன்ஸ்’ (எதிர்ப்பு) இல்லாத வாழ்க்கையில ருசி இல்லை தானே’’ என்றார் ரேவதி நடராஜன்.<br /><br />அண்ணாநகரில் ‘பொட்டீக்’ நடத்திவரும் பத்மினி குமாரவேலு, ‘‘என்னைப் பொறுத்தவரை கணவருக்கு பிடித்த மனைவியா இருக்கணும்னா, அதுக்கு மூணு விஷயங்கள் முக்கியம். ஒண்ணு, அவருக்கு பிடித்தமான சமையல். இரண்டாவது, கணவர்கிட்ட ஒளிவு மறைவு இல்லாம இருக்கறது. நம்மை பத்தின ஏதாவது ஒரு விஷயம், அது தப்பாவே இருந்தாகூட அது இன்னொரு நபர் மூலமா தெரியறதைவிட நம்ம மூலமா கணவருக்கு தெரியறதுதானே நல்லது. மூணாவது, அவரோட பெற்றோரை நம்ம பெற்றோரா நினைத்து நல்லாப் பார்த்துக்கறது. இந்த மூணும் சரியா இருந்துட்டாலே கணவர்கிட்ட எளிதாக நல்ல பேர் வாங்கிடலாம்!’’ என்று டிப்ஸ்களை அள்ளி விட்டார்.<br /><br />‘‘சரியா சொன்னீங்க பத்மினி! அதே போல, குறிப்பறிந்து நடந்துக்கறதும் ரொம்ப முக்கியம். எங்க ரெண்டு பேருக்கும் ஒரே ரசனைங்கிறதால கடைக்கு ஏதாவது வாங்கப் போகும்போதுகூட பெரிசா அபிப்ராய பேதம் ஏதும் வந்ததில்லை. ஆனாலும், ஏதாவது ஒண்ணு, எனக்கு பிடிச்சு அது அவருக்கு பிடிக்கலைன்னா, அதை அவரது முகமே காட்டி கொடுத்து விடும். குறிப்பறிந்து நானும் அதை வேண்டாம்னு விட்டுடுவேன். அதேபோல, அவர் வெளியில போயிட்டு வரும்போது, பூட்டிட்டு நான் எங்கேயும் போயிடாம வீட்டில இருக்கணும்னு எதிர்பார்ப்பார். ‘வெளியில பல வேலையா போயிட்டு வர்ற மனிதருக்கு வீட்ல வந்து நம்ம முகத்தை பார்த்தா எதிர்பார்க்குறார்&னு அவரோட கோணத்திலிருந்து புரிஞ்சி கிட்டாலே போதும், அமைதியான ஓடை போல வாழ்க்கையும் சீராக போகும்!’’ என்று அனுபவக் குறிப்பை வழங்கிய அழகம்மை பழனியப்பன், தனது அக்காவின் மறைவுக்கு பிறகு, அக்கா கணவருக்கு இரண்டாவது மனைவியானவர். அக்காவின் இரு மகன்கள், தனது மகன் என மூன்று மகன்களையுமே தான் நன்றாக கவனித்துக் கொள்வதும் தனது கணவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்கிறார் இவர்.<br /><br />அமைதியாகவே இருந்த பிரமிளா பாலகிருஷ்ணனை, ‘‘என்ன பிரமிளா மேடம், நீங்க நல்ல பெயர் வாங்கற ரகசியத்தை எங்களுக்கு சொல்லக்கூடாதா?’’ என்று மீரா சீண்ட.. ‘‘பெரிய சிதம்பர ரகசியம் எல்லாம் ஒண்ணுமில்லை. எங்க பாட்டி எங்க எல்லாருக்கும் சின்ன வயதிலிருந்து ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்லுவாங்க.. அதாவது, வீட்டு பெண்களோட குரல் வீட்டைத் தாண்டி வெளியில கேட்கக்கூடாதுனு. பொறுமையா, மென்மையா, நிதானமா எல்லா விஷயங்களையும் கையாண்டாலே போதும், இல்லறம் இனிய இல்லறமா, நல்லறமா இருக்கும்!’’ என்றார் பிரமிளா, முத்தாய்ப்பாக.<br /><br />சும்மாவா சொன்னார் வள்ளுவர், ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என்று.<br /><br /><div align="right"><strong>- பானு, படங்கள்: பாட்ஷா</strong><br /><br /></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-81757401293248932312009-07-28T23:40:00.000-07:002009-07-28T23:46:00.342-07:00மல்லிகை மகள் - ஆகஸ்ட் 09 இதழ்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIIFnEWjoAXW7BDRHiXZwY-7i49XXPQfpmDQNxhaFX9FSz3pRW4myPIQGvwD6zZBdm3kNH7xu3UAQQzBYCQx4jGDjuOAkfRpLSrVRXQJyJb4kb0QlLdCBkLn3jEj7FVvmTXjQHGtz7WsQ/s1600-h/Wrp+SV+-+Aug+copy.jpg"></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjExvg9nLqxGW7XxQUDe8M3NiqlFc6RBdyAjj_wRmOjrBUpjFV_axhcobqc86MbaYmQF_w2GY9BFsi4cnwPhcknNbIkwusQyYINEYWRDNdfQVLqEbB5Xs0gT3grguJ_h5mxYyNurkB3MPM/s1600-h/Wrp+SV+-+Aug+copy.jpg"></a><br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2ViTglIDRqYato8cB2c5EmyI6HyNY12hCk5L5TuS20do3N5xq9v_Fm7Z9plO-ZXxOOUUBA_6sLDv8o_pnm9jgkSiCXtu0Le-tvBgxwPq9S8wcJzV-QBUQFxfVwQDTV9n0a_GlIG_Aqaw/s1600-h/Wrp+MM+-+Aug+copy.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5363769040633921026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 232px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2ViTglIDRqYato8cB2c5EmyI6HyNY12hCk5L5TuS20do3N5xq9v_Fm7Z9plO-ZXxOOUUBA_6sLDv8o_pnm9jgkSiCXtu0Le-tvBgxwPq9S8wcJzV-QBUQFxfVwQDTV9n0a_GlIG_Aqaw/s320/Wrp+MM+-+Aug+copy.jpg" border="0" /></a><br /><br /><br /><div></div></div></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-47530340181308547272009-07-01T04:32:00.000-07:002009-07-01T04:44:02.260-07:00ஜூலை 2009 - சுப வரம் இதழில்..<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz_CUWbx7sc6zdhYySAaZK36raZDhFgpG3tTyl6Sdxc5V1wheliXba4k8MvRRtsV6Dxb8n65stG-wWMdYMTUdt16tMJE7FcxYtHk7tbavpcw2sRMosqXNpRYa8ZLZ_4reuWk58xhMohjY/s1600-h/Wrp+SV++-+July-09.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5353455984004199618" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 232px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz_CUWbx7sc6zdhYySAaZK36raZDhFgpG3tTyl6Sdxc5V1wheliXba4k8MvRRtsV6Dxb8n65stG-wWMdYMTUdt16tMJE7FcxYtHk7tbavpcw2sRMosqXNpRYa8ZLZ_4reuWk58xhMohjY/s320/Wrp+SV++-+July-09.jpg" border="0" /></a><br /><div>* சிறைவைக்கப்படும் பிள்ளையார் - ஒரு விநோத பிரார்த்தனை</div><br /><div>* கடன் தொல்லை நீக்கும் கண் கண்ட தெய்வம்! - அதிசய அனுபவங்கள்</div><br /><div>* அனுமார் கல்யாண வைபோகமே! </div><br /><div>* மடைப்பள்ளி ரகசியம் - மயிலாப்பூர் ஷீர்டி பாபா கோயில் வெண்பொங்கல்</div><br /><div>* தெய்வம் தந்த மறுஜென்மம் - கமலா தியேட்ட வி.என்.சிதம்பரம் அனுபவம்</div><br /><div>* கண்டேன் இறைவனை! பரவசமூட்டும் அனுபவங்கள்</div><br /><div>* ஆண்டிக்கோல முருகன் வீட்டுக்கு ஆகாதா? - ஷண்முக சிவாசார்யர் பதில்</div><br /><div>* பக்தி காவியங்கள் பிறந்த கதை தொடரில்.. விதுர நீதி</div><br /><div>* ஹதயோகம் - ஸ்வாமி ஓம்கார்</div><br /><div>* ஷீர்டி சாயி புராணம் - முதல் அற்புதம்</div><br /><div>* வக்கிரங்களிலிருந்து காப்பாற்றும் வக்ர காளி - அதிசய கோயில்கள்! </div><br /><div>* இறைவனின் இல்லங்கள் - ஸ்தபதி தட்சிணாமூர்த்தி சிறப்பு பேட்டி</div><br /><div>* கேரள பிரசன்ன மாத பலன்கள் - ஸ்வாமி ஓம்கார் வழங்கும் 32 பக்க இணணப்பு</div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-36802726600129589722009-07-01T04:13:00.000-07:002009-07-01T04:31:50.470-07:00ஜூலை இதழ் மல்லிகை மகள் இதழில்..<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuefOtJtzJ18-UFyjTX9Er668BNJq5mP1CCmIk7DGuKP7hzipoFaML4W2WG4qZ5cSbMnoq7U_d12nJMC0UW9TM0Ide3UL-KJ7yGnRk4qHxhHM6p2V2YOxCxNKYashSpeya-73cJUBOd3w/s1600-h/Wrp+MM++-+July-09.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5353452940231478610" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuefOtJtzJ18-UFyjTX9Er668BNJq5mP1CCmIk7DGuKP7hzipoFaML4W2WG4qZ5cSbMnoq7U_d12nJMC0UW9TM0Ide3UL-KJ7yGnRk4qHxhHM6p2V2YOxCxNKYashSpeya-73cJUBOd3w/s320/Wrp+MM++-+July-09.jpg" border="0" /></a><br /><div>* இதய நோய்க்கு செலவில்லாத வைத்தியம்!</div><br /><div>* என் வீடு.. என் கனவு! - இண்டீரியர் விருந்து</div><br /><div>* பணம் காய்க்கும் மரம்! வசதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும் தொடர்</div><br /><div>* நித்தம் நித்தம் சத்துணவு.. டயட் தொடர்</div><br /><div>* ட்வெண்டி -20.. புதிய பகுதி</div><br /><div>* இரண்டே ஆண்டுகளில் ஜெயித்தேன்.. பிஸினஸ் வெற்றிக் கதை</div><br /><div>* குழந்தைகள் மனசு - 25 டிப்ஸ்</div><br /><div>* ஐஸ்லாந்து - அமைதிப்பூங்கா</div><br /><div>* நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் - டானிக் ஸ்டோரி</div><br /><div>* மசாலா கிரேவி வகைகள்.. 32 பக்க இணைப்பு</div><br /><div></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-52840926679144142122009-06-02T00:07:00.000-07:002009-06-02T00:38:17.515-07:00உங்கள் கவனத்துக்கு!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNo0yyDuifT7vIAEnN9Cp18inSMWAyjaZtTSJ1AG74HQvtMubUpoxHUi2EjbrVE-dW2g5SafzWJBZ0THGBSr_eXyy6QOpGzdQnWyKTa_AMxxabql_8ugK6gnvRRIknW15B_hVOiRpMoXU/s1600-h/Wrap+MM+-June.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5342631014239060194" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNo0yyDuifT7vIAEnN9Cp18inSMWAyjaZtTSJ1AG74HQvtMubUpoxHUi2EjbrVE-dW2g5SafzWJBZ0THGBSr_eXyy6QOpGzdQnWyKTa_AMxxabql_8ugK6gnvRRIknW15B_hVOiRpMoXU/s320/Wrap+MM+-June.jpg" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfsr3-3p1VbgRSxJBbHrlp7gbExDAXW9rAsAiX0Mx978EAYTWdGKBl9ohbWWAcfpFpW7Ky1tjTwA6rW2r3PTCCmbLC2ED7j3I_vjQKiTTriF8h-DbCWoxtMKAhyphenhyphenmTBfNVV4V5cVHt7DVU/s1600-h/Wrp+S+Varam+June.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5342629608475213154" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfsr3-3p1VbgRSxJBbHrlp7gbExDAXW9rAsAiX0Mx978EAYTWdGKBl9ohbWWAcfpFpW7Ky1tjTwA6rW2r3PTCCmbLC2ED7j3I_vjQKiTTriF8h-DbCWoxtMKAhyphenhyphenmTBfNVV4V5cVHt7DVU/s320/Wrp+S+Varam+June.jpg" border="0" /></a><br /><br /></div><div> </div><div><br /><span style="color:#cc0000;"><strong>சுப வரம்</strong></span> - ஜூன் இதழ்..</div><div>மற்றும்</div><div><span style="color:#000099;"><strong>மல்லிகை மகள்</strong></span> - ஜூன் இதழ்<br /><br /><br /></div><div><span style="font-size:180%;color:#cc0000;">இப்போது விற்பனையில்..</span></div><div><br /><br /></div><div></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1520320045450995014.post-86873877029783025532009-05-26T23:53:00.000-07:002009-05-27T00:06:56.798-07:00உஷார்! உங்களுக்கும் இது ஒரு பாடம்!<strong><span style="font-size:130%;color:#ff0000;">செ</span></strong>ன்னையின் புறநகர்ப் பகுதியிலிருக்கும் பிரம்மாண்டமான மருத்துவக்கல்லூரி மருத்துவமனை..<br /><br />இலவச மருத்துவ சிகிச்சைப் பகுதியில், இரண்டாம் தளத்திலிருந்த பெண்கள் வார்டின் கடைசி வரிசையில் முதல் கட்டில்.. கட்டில் சைஸுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல், சிறிய மைனாக்குஞ்சு போல உட்கார்ந்திருந்தார் அந்த அம்மையார். வயது 86.<br /><br />‘‘மணி என்ன இப்போ? ஆறே முக்கால் ஆச்சா? அப்ப, இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு கொண்டுவந்துடுவான்..!’’ என்று மூன்றாவது தடவையாக சொல்லிவிட்டு, அந்த வார்டின் வாசல்புறம் பார்த்துவிட்டு நம்மைப் பார்த்துச் சிரித்தார். ஆங்காங்கே சில பற்கள் விழுந்திருக்க, குழந்தையின் சிரிப்புப் போன்றிருந்தது அது.<br /><br />புன்னகைக்கத் தோன்றாமல், வயிற்றைப் பிசைந்தது நமக்கு!மூப்பு காரணமாகக் குறுகியிருந்த உடலைவிடப் பெரிய சைஸிலான நைட்டி.. கால்களுக்குக் கீழே விழுகிறது என்பதால் இடுப்பில் கொஞ்சம் சுருட்டி, ஒரு நாடாவை வைத்துக் கட்டி விடப் பட்டிருந்தது. கண்ணாடிக்குப் பின் கருவிழிகள் கூர்மையாக போவோர் வருவோரை அலசியபடியிருக்க, வாய் அவர்களைப் பற்றியோ, அந்த வார்டு, அதன் தலைமை மருத்துவர், டியூட்டி நர்ஸ்கள், சக படுக்கை நோயாளிகள் பற்றிய ஏதாவது ஒரு தகவலை உதிர்த்தபடி இருந்தது.<br /><br />கட்டில் அருகிலேயே வாக்கர்! அதில் காயும் ஒரு நைட்டி, ஒரு துண்டு. அவரருகே ஒரு டைரி, ஒரு பேனா.. ஒரு மொபைல். இடதுபுறமிருந்த வெள்ளை நிற குட்டி அலமாரியில் சில பிஸ்கெட் பாக்கெட்டுகள், இரண்டு ஆப்பிள், ஒரு தட்டு, இரண்டு டம்ளர்.. தண்ணீர் (கூல்ட்ரிங்க் வந்த) பாட்டில்கள்..<br />இந்த அம்மையார், ஒரு காலத்தில் இலக்கிய உலகின் முடிசூடா ராணியாக விளங்கியவர் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?<br />கணவருக்கு மிக உயர்ந்த அரசுப் பணி. கை நிறைய சம்பளம். இந்த அம்மையார் எழுதிக் குவித்ததும் அதன் மூலம் அவர் பெற்ற விருதுகளும் ஏராளம்.. ஏராளம்! இன்று பல்கலைக் கழகங் களில்கூட அவருடைய எழுத்துக்கள் பாடமாக இருக்கின்றன. சென்னையில் சொந்தவீடு, வங்கியில் கணிசமான இருப்பு, நகைகள், வீடு கொள்ளா விருதுகள் என ராணி போல வளைய வந்தவர்தான்.. ஆனால், உறவினர்கள் மேல் வைத்த அதீத நம்பிக்கையும், வளர்ப்பு மகன் மேல் கொண்ட அளவற்ற பாசமும் அவரை இப்படி ஒரு பரிதாப நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது.<br /><br />நாம் அவரை ‘அம்மா’ என்றே அழைப்போம். அம்மாவுக்கு பூர்விகம் தஞ்சாவூர்ப் பக்கம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு, கணவருக்கு அடிக்கடி மாற்றல் வரும் உத்தியோகம். புதிய இடம், புதிய சூழல், புதிய மனிதர்கள் என்றால் அம்மாவுக்கு அல்வா சாப்பிடுவது போல! அந்த சூழலையும் அந்த மனிதர்களையும் தனது அடுத்த கதையிலோ, நாவலிலோ பதிவு செய்துவிடுவார். இப்படி, மனைவிக்கு பிடிக்கும் என்பதாலேயே யாருமே போக விரும்பாத மலைப்பிரதேசங்கள், கிராமங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் என்றாலும்கூட கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிடுவார் கணவர். அப்படி ஒரு காதல் வழியும் தம்பதி!<br /><br />அவர்களுக்கு ஒரே குறைதான்! திருமணமாகி ஆண்டுகள் பல ஆகியும், அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. முற்போக்குக் கருத்துக்களும் பெண்ணுரிமைவாதியுமான அம்மா, அதை ஒரு சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொண்டார். அதிகம் கவலைப்படவோ, கோயில், பிரார்த்தனை என்று போகவோ செய்யவில்லை. யதார்த்தத்தை அது வரும் போக்கிலேயே எடுத்துக்கொண்டு வாழ்ந்தனர்.<br /><br />அம்மாவுக்கு சகோதர, சகோதரிகள் அதிகம். அவர்களின் குழந்தைகளுக்குப் பிரியமான அத்தையாக, சித்தியாக இருந்தார். தனக்குப் பிள்ளை இல்லாத குறை தீர, உடன்பிறந்தவர்களின் குழந்தை களைக் கொஞ்சி மகிழ்ந்தார். அதில் ஒரு குழந்தை இவரிடம் அதிகமான ஒட்டுதலுடன் வளர்ந்தது. இவர்கள் வீட்டிலேயே, வளர்ந்து பெரியவனாகி, வேலைக்கும் போனார் அந்த வளர்ப்பு மகன். தன்னுடைய பாசம் முழுவதையும் அந்த மகன் மீது கொட்டி வளர்த்தார் அம்மா.<br /><br />ஆனால், அத்தனை பாசமும் மிகப்பெரிய கேள்விக் குறியாக நின்றது, எட்டு வருடங்களுக்கு முன்பு அவருடைய கணவர் இறந்தபோது!<br />அம்மாவின் கணவர் இறந்தபோது, வந்த ஜனக்கூட்டம் போனபோது வீடு ‘வெறிச்’ என்றானது. உறவினர்களும் போனபிறகுதான், அம்மாவுக்கு ‘தான் தனிமரமாக’ நிற்பது உறைத்தது. என்ன எழுதி என்ன பயன்? அவருடைய தனிமையைப் போக்க எதுவுமே உதவவில்லை. ‘சொந்தங்கள்தான் இருக்கிறதே!’ என்று அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எல்லோருக்கும் போன் செய்தபோது.. அவர்கள் சொன்ன பதில் -<br /><br />‘‘அவ்வளவு பெரிய வீட்ல நீ மட்டும் இருக்காத.. யாராவது வந்து, உன்னை ஏதாவது பண்ணிட்டு, இருக்கறதை கொள்ளையடிச்சிட்டுப் போயிடப் போறாங்க! வீட்டை வித்து, பேங்க்&ல போட்டுட்டு எங்க வீட்டுக்கு வந்துடு. நீ எங்க கூடவே இருந்துக்கலாம்!’’<br /><br />அப்புறம் நடந்ததெல்லாம் இவர் கைமீறிய விஷயங்கள்தான்!<br /><br />மூன்று கிரவுண்டில் இருந்த அந்தப் பெரிய வீடு.. அம்மாவும் அவருடைய கணவரும் பார்த்துப் பார்த்துக் கட்டிய கனவு மாளிகை.. அம்மாவின் எழுத்துக்களுக்கு உயிர் தந்த அதன் மலர்த் தோட்டம்.. விலை பேசப்பட்டது.<br />வீட்டை விற்ற பணத்தை அக்கவுன்ட்டில் போட்டார்கள். வாங்கிய பார்ட்டிக்கு வீட்டை ஒப்படைக்கும் முன்பு, மாபெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர் சொந்தங்கள். ‘‘அத்தை.. இந்த வெள்ளிப்பிடி போட்ட வாக்கிங் ஸ்டிக் மாமாவோடதுதானே! நான் வச்சுக்கறேன்..’’ என்று ஒரு மருமகள், ‘‘பெரீம்மா.. இந்தத் தங்க முலாம் பூசின நடராஜர் சிலை, உனக்கு அந்த இலக்கிய விழால கொடுத்ததுதானே! இந்த மாதிரி ஒரு சிலையைத்தான் எங்க பூஜை ரூம்க்காக ரொம்ப நாளாத் தேடிண்டிருக்கார் இவர்!’’ என்று ஒரு மகள்.. இப்படி ஆளாளுக்கு கைக்குக் கிடைத்ததை எடுத்துக் கொண்டு போக.. வேண்டாவெறுப்பாக அம்மாவைத் தன்னோடு அழைத்துச் சென்றார், வளர்ப்பு மகன். ஆனால், அந்த வளர்ப்பு மகனும் கடைசியில் அநாதரவாக விட்டதுதான் கொடுமை!<br /><br />அப்படி, இப்படி என்று ஒவ்வொரு வீட்டிலுமாக அம்மாவைப் போட்டு இழுத்தடித்து, கடைசியாக மீண்டும் வளர்ப்பு மகன் வீட்டுக்கே வந்தபோது... அங்கே அழுது வீங்கிய கண்ணும் முகமுமாக வரவேற்ற மகனும் மருமகளும், ஒரு பெரிய ‘சோகக் கதை’யை எடுத்து விட்டிருக்கிறார்கள். தங்களின் பிசினஸில் பயங்கர நஷ்டம் என்றும், கடன் தொகை 98 லட்சமாக உயர்ந்துவிட்டதென்றும், உடனே கட்டவில்லை என்றால், குடும்பத்தோடு கம்பி எண்ண வேண்டுமென்றும்.. கதாசிரியருக்கே கதை சொல்லியிருக் கிறார்கள்.<br />அப்பாவி அம்மாவுக்கு பாசம் கண்களை மறைத்தது. என்ன ஏதென்று கூடக் கேட்காமல், தன் பேங்க பாலன்ஸ், நகைகள் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்.<br />அதன் பிறகுதான் கொடுமையான க்ளைமாக்ஸ்!<br /><br />‘கடன்களை செட்டில் செய்துவிட்டாலும், பெருத்த அவமானம் ஏற்பட்டு விட்டதால் இந்த ஊரில் இனி இருக்க முடியாது’ என்றும் ‘தாங்கள் ஊரை விட்டே போகப் போவதால், தங்களால் இனி அம்மாவை வைத்துப் பராமரிக்க இயலாது’ என்றும் அந்த வளர்ப்பு மகன் நீலிக்கண்ணீர் வடிக்க.. கரைந்து போனார் அம்மா!<br /><br />அதுதான் சாக்கு என்று அவரை முதன் முதலாக முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள்.<br /><br />‘‘கேக்காத.. அந்தக் கண்றாவிக் கதையெல்லாம் கேக்காத.. என் பணம், நகை போகட்டும்.. அதெல்லாம் யாருக்கு வேணும்? ஆனா.. நான் உயிரா நேசிச்ச என் புத்தகங்கள்.. அற்புதமான என் லைப்ரரி.. என் திறமைக்கு கிடைச்ச அவார்டுகள்.. மெடல்கள்.. எல்லாம் இப்போ எங்கே இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது.. எனக்கு சொத்துனு.. இதோ இந்தக் கட்டிலைச் சுத்தி இருக்கற சாமான்கள்தான்!’’ என்று அவர் கதறியபோது.. காணச் சகிக்கவில்லை.<br />அப்போது நீலநிறச் சீருட அணிந்த பணியாள் ஒருவர் வந்து நர்ஸிடம் ஏதோ பேசிவிட்டுச் செல்ல..<br /><br />‘‘அதோ அவர்தான் சாப்பாடு கொண்டுவர்றவர்.. எல்லாருக்கும் ரெண்டு சப்பாத்தி.. சாதம்! எனக்கு மட்டும் மூணு சப்பாத்தி, கூட்டு! கூட்டு கொஞ்சமாத்தான் கொடுப்பா.. நான் சாயந்தரம் தர்ற பாலை வாங்கி, குடிக்காம வச்சிருப்பேன்.. அதை சப்பாத்தில் ஊத்தி சாப்பிட்ருவேன்!’’ என்றார்.<br />‘கடவுளே...!’’<br /><br />அந்தி சாய்ந்துவிட்டது. மிகப் பெரிய அந்த வளாகத்தின் மரத்து பறவைகள் ஏகப்பட்ட இரைச்சலுடன் கூட்டில் அடையத் தொடங்கியிருந்தன.<br />நீலச் சீருடை ஆளையே பார்த்தபடி பேசினார் அம்மா..<br />‘‘என்னை ஓல்ட் ஏஜ் ஹோம்ல விட்டதுக்கு, ஏதாவது நரகத்துல விட்டிருக்கலாம்.. கொடுமைம்மா அது! எல்லாரையும் டாய்லெட் கூட்டிட்டுப் போய் வர்றதுக்கு சங்கடப்பட்டு, மூத்திர ட்யூப் மாட்டிவிட்ருவாங்க.. எழுந்து நடக்கறப்ப, அதைத் தூக்கிண்டே நடக்கணும்.. இப்படி அங்கே நிறைய அக்கிரமங்கள்! எப்படியோ ரெண்டு வருஷம் ஓட்டினேன்.. முதல்ல வந்து பார்த்த சொந்தங்கள், அப்புறம் போன் விசாரிப்போட நிறுத்தினாங்க. அதுக்கப்புறம், அவங்க கூப்பிட்டப்போ, நான் பேசறதை நிறுத்திட்டேன். என் கணவரின் பென்ஷனையும் ஏதோ பண்ணிட்டாங்க.. எனக்கு வர்றதில்ல. என்னம்மா சொந்தம் பந்தம் எல்லாம்!’’ & விரக்தியின் உச்சத்தில் கண்ணீர்கூட காய்ந்து விட்டது.<br /><br />‘‘நல்ல நடை உடையாப் போன நான், அங்கே வழுக்கி விழுந்ததில நடக்க முடியாம, வாக்கர் வச்சு நடக்கற நிலைமைக்கு ஆளாயிட்டேன்! என்னால இனிமே அங்கே இருக்கவே முடியாதுன்றபோது, எனக்கு உன்னை மாதிரி பத்திரிகை உலகத்துல இருக்கற நண்பர்களும் சிலருமா சேர்ந்து என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தாங்க... வந்து நாலு மாசமாகுது..<br />ஆனா அம்மா.. இந்த ஹாஸ்பிடல்ல சும்மா சொல்லக் கூடாதும்மா.. ஃப்ரீ வார்டுன்னாலும் கவனிப்புக்கு எந்தக் குறையுமில்ல. தினமும் மதிய சாப்பாடு, சீஃப் டாக்டர் வீட்டிலருந்து வருது.. டாக்டருக்கு சாப்பாடு கொடுத்தனுப்பும்போது, எனக்கும் கொஞ்சம் சாதம், காய்கறிகள், கீரை, பழங்கள்னு கொடுத்தனுப்புறாங்க.. நான் தத்தெடுத்த புள்ளை என்னைத் துரத்திவிட்டுட்டான்.. ஆனா, இப்போ என்னைத் தத்தெடுத்துக்கிட்ட டாக்டரின் கருணையால நான் உயிரோட இருக்கேன்!’’ என்றவர், ‘‘ஸ்,.. அப்பா..’’ என்று வலியில் முனகியபடி, திரும்பி அமர்ந்தார்.<br /><br />‘‘இடுப்பும், முதுகும் வலி கொல்லுதும்மா.. நேத்து நைட் முழுதும் தூங்க முடியாம புரண்டு படுக்க முடியாம மரண அவஸ்தைப்பட்டேன்.. இன்னிக்கு ராப்பொழுது எப்படிப் போகப் போகுதோ.. தெரியலியே! ராத்திரி வந்தாவே பயமா இருக்கும்மா! யம்மாடி.. பசிக்குது.. இன்னும் சாப்பாடு வரலியே!’’ என்றவர், ‘‘அந்தப் பையில் பிஸ்கட் இருக்கு.. எடுத்துத் தர்றியாம்மா?’’ என்றார்.<br />நாம், ‘‘ஆப்பிள் நறுக்கித் தரட்டுமா?’’ என்றதும், ‘‘கத்தியெல்லாம் கிடையாதும்மா’’ என்றார்.<br /><br />பக்கத்து ‘பெட்’காரரிடம் கேட்டு கத்தி வாங்கி, ஆப்பிளைக் கழுவிவிட்டு, நறுக்கித் தர.. வேகம் வேகமாக எடுத்துச் சாப்பிட்டார். பாவமாக இருந்தது!<br />எத்தனை நாடுகளைப் பார்த்தவர்.. எத்தனை உயர்மட்ட விருந்துகளில் கலந்துகொண்டவர்.. எத்தனை நட்சத்திர ஹோட்டல்களில் இவருக்குப் பாராட்டு விழா நடந்திருக் கும்.. இவரது கணவருடன் எங்கெல்லாம் போய் உணவு அருந்தியிருப்பார்.. வீட்டில் எப்படி எல்லாம் விதம்விதமாக சமைத்து சாப்பிட்டிருப்பார்..!’<br /><br />ஒரு நிமிஷம் நாம் உணர்வுகளில் கரைய, கண்களை நீர் மறைத்தது.<br />தூரத்தில் உணவு வண்டி தெரிந்ததும் அனைத்து நோயாளிகளின் அட்டெண்டர்களும் சுறுசுறுப்பாகத் தயாரானார்கள், க்யூவில் நிற்க!<br />‘‘தட்டைக் கொடுங்கம்மா.. நான் வாங்கிட்டு வரேன்..’’ என்றதும், ‘‘ஊஹூம்.. உன்னை அவருக்குத் தெரியாது.. புது ஆளுனு ரெண்டு சப்பாத்தி போட்ருவார்.. எப்போதும் வாங்கற ஆயா வாங்கினாதான் மூணு சப்பாத்தியும் நிறையக் கூட்டும் போடுவார்!’’ என்று பரிதவித்தார்!<br /><br />அய்யோ.. கொடுமையே!<br /><br />ஆயா கொண்டுவந்த தட்டில் சூடான சப்பாத்திகளைப் பார்த்ததும், பஞ்சடைந்திருந்த அந்தக் கண்களில் அப்படி ஒரு ஒளி! ஏதோ ஒரு வாரம் சாப்பிடாதவர் போல அவ்வளவு வேகமாக பிய்த்து வாயில் போட்டார். நாம் பாட்டிலில் இருந்து டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டுக் காத்திருந்தோம்.<br /><br />‘‘எனக்கு சுகர் இருக்கே! அதனால சர்க்கரை தொட்டுக்கக் கூடாது!’’ என்றவர் சாப்பிட்டு முடிக்க, தட்டை எடுத்துச் சென்று கழுவி வந்தோம்.<br />‘‘இது யாரு பாட்டி.. உங்க பேத்தியா?’’ - பக்கத்து பெட்டில் இருந்த அம்மா விசாரிக்க..<br /><br />‘‘எங்க பத்திரிகைக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க..’’ என்று சந்தோஷமாக அறிமுகப்படுத்தினார்.<br /><br />அந்த அம்மா நம்மைப் பார்த்து, ‘‘பாவம்மா இந்தப் பாட்டி.. ஏதாவது எழுதுவாங்க.. படிப்பாங்க.. சீஃப் டாக்டர்கிட்டே போய்ப் பேசிட்டு வருவாங்க.. மத்தபடி இவங்களைப் பார்க்க எப்பவாவது வர்ற ஒருத்தரைத் தவிர யாருமே வர்றதில்லம்மா!’’ என்றார்.<br /><br />‘‘ஆமாம்மா.. இங்கே பாத்தியா.. எல்லா ‘பெட்’டுக்கும் அட்டெண்டர் உண்டு.. எனக்கு மட்டும்தான் யாரும் கிடையாது. அதேமாதிரி இங்கே யாருக்காவது என்னை மாதிரி முழுசா நரைச்சிருக்கா பாரு.. எல்லாம் சின்னப் பொண்ணுங்க.. அதுக்குள்ள ஏதேதோ வியாதி வந்து அட்மிட் ஆகியிருக்காங்க.. நான் ஒருத்திதான் இவ்வளவு வயசாகி, முதுமையினால இங்க வந்திருக்கேன்!’’ என்று சர்வசாதாரணமாகச் சொன்னபடி மீதமிருந்த பாலை வாயில் ஊற்றிக் கொள்கிறார் அம்மா.<br /><br />‘‘எனக்கு யார் யாரோ உதவ வர்றதா சொல்றாங்கம்மா..என் தன்மானம் அதையெல்லாம் ஏத்துக்கறதுக்கு இடம் கொடுக்கலம்மா.. நான் அப்படி ஒரு வாழ்க்கை வாழலியே! இந்த நிலமையில அது தப்பு இல்லேன்னாலும் என் மனசு சம்மதிக்கலயே..’’ என்று தன்னிலை விளக்கம் கொடுக்கும் அம்மா, கீழே விழுந்ததில் எழுத வராமல் இருந்த தன் விரல்களுக்கு, இரண்டு குயர் பேப்பர் வாங்கித் தரச்சொல்லி எழுதி எழுதிப் பயிற்சி கொடுத்து, இப்போது ஒருவிதமாக, புரியும் அளவுக்கு எழுதுகிறார்.<br /><br />டயரி முழுவதும் கவிதைகள். பணம், தேர்தல், தெருநாய், செவிலியர்கள் (அந்த மருத்துவமனை நர்ஸ்கள் பற்றி).. இப்படி எக்கச்சக்க கவிதைகள் எழுதி வைத்திருக்கிறார். எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்துக் காட்டுகிறார்.<br />‘‘நேரமாயிடுச்சு போலயே! இருட்டிப் போயிடுச்சே! நீ எப்படிம்மா போவ? உங்க வீடு எங்கே இருக்கு?’’ - அக்கறையோடு கேட்கிறார். நமக்கோ அங்கிருந்து கிளம்பவே மனசில்லை.<br /><br />‘‘சரிம்மா. பத்திரமா கிளம்பு.. இன்னிக்கு பொழுது எப்படி ஓடப் போகுதோ, பகவானே’னு நினைச்சிட்டிருந்தேன்.. பகவான்தான் உன்னை அனுப்பி இருக்கார்.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ வந்தது... இதிலேயே நான் தூங்கிப் போயிடுவென்!’’ - என்றவரிடம் மீண்டும் அந்தக் குழந்தைச் சிரிப்பு!<br />தாளமுடியாத வலியுடன், அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி, திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே அந்த வார்டை கடந்து படிகளில் இறங்கியபோது, கன்னங்களில் உருண்டது கண்ணீர்.<br /><br />ச்சே...! என்ன வாழ்க்கை!<br /><br /><div align="right"><strong>- நமது நிருபர்</strong></div>MALLIGAI MAGALhttp://www.blogger.com/profile/04856535428910303986noreply@blogger.com1