- கே.எம். மஞ்சுநாத், பெங்களூர்.
டாக்டர் ஜெயலஷ்மி: ''டூவீலர் ஓட்டுவது, கம்ப்யூட்டர் முன்பாக அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது போன்றவற்றால் பலருக்கு இப்போது முதுகு வலி ஏற்படுகிறது.கைகளைப் போன்றே நமது கால்களிலும் உடலின் பிரதிபலிப்புப் புள்ளிகள் அமைந்துள்ளன. பாதத்தின் பக்கவாட்டுத் தோற்றம் நமது முதுகுத் தோற்றத்தை போலவே இருக்கிறது.
பாதத்தில் உள்ள புள்ளி களை வரிசையாக அழுத்தும் போது, எந்த புள்ளிகளில் அதிக வலி ஏற்படுகிறதோ, அந்தப் புள்ளிக்குரிய முதுகுப் பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கண்டு கொள்ளலாம்.
காலை, மாலை இரு வேளைகளும் இந்தப் புள்ளிகளில் 14 தடவை அழுத்தம் கொடுத்துத் தளர்த்தி வரவும்.
ஒரு கட்டத்தில், காலில் உள்ள புள்ளிகளை அழுத்தும்போது, வலி இருந்த இடத்தில் வலி குறைந்திருப்பதை உணர்வீர்கள். அப்போது, முதுகு வலியும் நன்றாகவே குறைந்திருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த மாத ‘மல்லிகை மகள்’ இதழ் பாருங்கள்!
1 comment:
மிகவும் அருமை
Post a Comment